சீர்காழி, ஜூன் 6-கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாககுடிநீர் வீணாகி வருவதை தடுத்துநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் 600 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருக்கின்றனர். இந்த கிராமத்திற்கு குடிநீர் அளித்து வரும் 40,000லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. நிலத்தடி நீரை மின்மோட்டார் மூலம்வெளியே கொணர்ந்து நீர்த்தொட்டியில் ஏற்றி பின் தேக்கப்பட்ட தண்ணீர்தெருக்களில் குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலத்தடி நீர் தான் இங்குகுடிநீராக பயன்படுகிறது. பல இடங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுமக்கள் குடிநீருக்காக அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உமையாள்பதியில் உள்ள முக்கிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருப்பதால் இக்கிராமத்திற்கு போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைகின்றனர்.எனவே உடைந்த குழாய்க்குப் பதிலாக வேறு குழாயை பொருத்தி உமையாள்பதி கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள்சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.