tamilnadu

img

படித்த இளைஞர்களுக்கு ஊராட்சியிலேயே சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்! மாயா வெங்கடேசன் உறுதி

அறந்தாங்கி, டிச.21- குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி தபால் அலுவலகம் அருகே சனிக் கிழமை மாலை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் முபாரக் அலி தலைமை வகித்தார். செயலாளர் அப்துல் குத்தூஸ், துணை செயலாளர் ஹாரீஸ், ரபீக் ராஜா, பீர்முகம்மது, நிஜாம்தீன், மாணவரணி அன்சாரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கண்டன உரை நிகழ்த்தினார். பெண்கள், ஆண்கள் என ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு, குடியுரிமை திருத்த மசோ தாவை நடைமுறைபடுத்த முயற்சிப் பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது என்று மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி பேசினார்.