தரங்கம்பாடி, ஆக.24- அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநில அளவிலான மேடைப் பேச்சு, கவிதை, கட்டுரை எழுதுதல் ஆகியவற்றின் இறுதிச் சுற்றுப் போட்டிகள், மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இதில் நாகை மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற பொறையார் பள்ளி மாணவி இறுதிச் சுற்றில் பங்கேற்றார். சர்மிளா காடஸ் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சென்ற பிரீத்தி என்ற அம்மாணவி மாநில அளவில் இரண்டாம் இடத்தை வென்று தமிழ் வளர்ச்சித் துறையின் சான்றிதழ் பெற்றார். இம்மாணவி ஏற்கனவே மாவட்ட அளவில் வென்று பத்தாயிரம் ரொக்கப் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.