tamilnadu

மகாராஷ்டிராவில் “நிர்பயா படை” அமைப்பு

நாசிக், ஜூன் 10 - மகளிருக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவத்தால் பாதிக்கப்படும் பெண்களை கண்காணிக்க, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 10 பேர் கொண்ட “நிர்பயா படை” அமைக்கப்பட்டுள்ளது.  அந்தக்குழுவில் ஆடவர் மற்றும் மகளிர் காவலர்கள் இடம் பெற்றுள்ளதாக மாநகர  காவல்துறை ஆணையர் விஸ்வாஸ் நாங்கரே-பாட்டீல் தெரிவித்தார்.  இதுகுறித்து  மேலும் அவர் கடந்த 2012-ம் ஆண்டு தில்லி யில் நடைபெற்ற கும்பல் பாலியல் வன்கொடுமையால் பலியான நிர்பயாவின் பெயரால் இக்குழு ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிர்பயா படையில் இடம் பெற்றுள்ள குழு  உறுப்பினர்கள், பேருந்து நிலையங்கள், ரயில்நிலை யங்கள் மற்றும் பெரும் வணிக வளாகங்களுக்கு வந்து செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகை யில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர் என்று கூறினார். பெண்களுக்கு எதிரான சீண்டலில் ஈடுபடுபவர்களை கண்டால், 1091 என்ற காவல்துறையின் இலவச தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.