‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் ஒன்றிய அரசு!
சென்னை, ஜன. 14 - நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சி கள் மற்றும் பஞ்சாயத்து களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து விரைவில் பரிந்துரை களை வழங்க 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ஒன்றிய பாஜக அரசு அமைத்தது. குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங் களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்க ளவை முன்னாள் பொதுச்செய லாளர் சுபாஷ் சி. காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, தலைமை முன்னாள் விஜிலென்ஸ் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொது மக்களிடமும், அரசியல் கட்சி களிடமும் கருத்துக்களை கேட்டு வந்தது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான அறிக்கையை குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு விடம் சமர்ப்பித்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா வுக்கு பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அமைச்ச ரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் தான், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் எனக்கூறி ஒன்றிய பாஜக அரசு தற்போது கடிதம் அனுப்பி உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை அறிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. 2029ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்த லை அமல்படுத்த ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது.