tamilnadu

img

கோடிக்கணக்கான எளிய, நடுத்தர மக்களின் நலனுக்கு எதிரானது நகைக்கடன் புதிய விதிகளைத் திரும்பப் பெறுக!

கோடிக்கணக்கான எளிய, நடுத்தர மக்களின் நலனுக்கு எதிரானது நகைக்கடன் புதிய விதிகளைத் திரும்பப் பெறுக!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சு. வெங்கடேசன் எம்.பி. நேரில் முறையீடு

புதுதில்லி, மே 27 - இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகைக் கடன்களுக்கான புதிய விதிமுறை கள் எளிய மக்களை கடுமையாக பாதிக்கக் கூடியது என்பதால், அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஏற்கெனவே கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், செவ்வாயன்று ஒன்றிய அமைச்சரை தில்லியில் நேரிலும் மனு அளித்து சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தினார். நகைக் கடனுக்கான புதிய விதிமுறை கள் மக்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் பாதிக்கின்றன என்பதை, இந்தச் சந்திப்பின் போது, ஒன்றிய அமைச்சரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. விரிவாக எடுத்துரைத்தார். நகைக் கடனுக்குமா  திரும்பிச் செலுத்தும் தகுதி? “நகைக்கடன் பெறுவது சம்பந்தமாக ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. நகைக்கடன் பெறும்போது ‘கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்’ என ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனை கூறுகிறது.  பெரும்பாலான நகைக் கடன்தாரர்கள், தினக்கூலிகளாக, நிலையான மாதச் சம்பளம் இல்லாதவர்களாகவே இருக் கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கான ஆவணச் சான்றை காண்பிப்பது என்பது இயலாததாகும். அதுமட்டுமல்ல, நகைக்  கடனை பொறுத்தவரையில் அது 100 சத விகிதம் பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும். ஆகவே, கடன்தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன இருக்கிறது?” என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 100 சதவிகிதம்  லாபமீட்டும் வங்கிகள் அடுத்ததாக “’தங்க நகையின் மீதான மூல ரசீதோ அல்லது உடமை உரிமை ஆவணமோ அவசியம் என்கிறது’ புதிய விதிமுறை. தங்க நகைகள் என்பது பல பத்தாண்டுகளாகவோ அல்லது இரண்டு மூன்று தலைமுறையாகவோ இருந்து வரும் நிலையில் மூல ரசீதுக்கோ அல்லது உடமை உரிமை ஆவணமோ பெறுவது எளி தல்ல!” என்பதைச் சுட்டிக்காட்டிய சு. வெங்கடேசன் எம்.பி. “நகைக்கடன் என்பது  எளிய, நடுத்தர மக்கள் கடன் பெறுவதற் கான கடைசி புகலிடமாக உள்ளது. வங்கி களைப் பொறுத்த வரை 100 சதவிகிதம் லாபம் ஈட்டுகின்றன என்பது மட்டுமல்ல, வராக்கடன் என்கிற பிரச்சனையே இதில் இல்லை. அப்படி இருக்கும் சூழலில் நகைக்கடன் மீது புதிதாக இவ்வளவு கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏன் விதித்துள்ளது?” என்ற கேள்வியையும் எழுப்பினார். முரண்பாடான சுற்றறிக்கை முக்கியமாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் கருத்துகள் பெறுவதற்கான நகல் என்று சொல்லி விட்டு, அடுத்த பத்தியிலேயே ‘இந்த உத்த ரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது முற்றிலும் முரண்பாடாக உள்ளதையும் தெரிவித்தார். “வங்கிகளைப் பொறுத்தவரை நூறு சதவிகித பாதுகாப்பானது, வராக்கடன் என்பது துளியும் இல்லாதது என்றால், அது நகைக்கடன் ஒன்று தான். அதனால் தான் இது சம்பந்தமாக வங்கிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை. அது மட்டுமல்ல கடந்த  15 ஆண்டுகளுக்கும் மேலாக நகையின் விலை கூடிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை. அப்படி யிருக்கும் சூழலில் நகைக்கடன் சார்ந்து இவ்வளவு கடுமையான விதிமுறைகளை, அவசர அவசரமாக ரிசர்வ் வங்கி விதிப்ப தென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றா கும்” என்று குறிப்பிட்ட சு. வெங்கடேசன் எம்.பி. “கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கு எதிரானதாக உள்ள ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் தொடர்பான புதிய நிபந்தனை கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். இந்த விபரங்கள் அனைத்தையும் கேட்டறிந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன், இதன் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள் ளார்.

கோடிக்கணக்கான மக்களை குறிப்பாக ஏழைகள், கீழ் மற்றும் நடுத்தர வர்க்க பெண்கள்,  விவசாயிகளை பாதிக்கக்கூடிய மேற்காணும் பிரச்சனையை உங்களின் உடனடி கவனத்திற்கும் தீர்வு காண்பதற்கும் கொண்டு வருகிறேன்.  நகைக் கடன் என்பது சாதாரண கடன்தாரரின் கடைசிப் புகலிடமாகும். அவசர செலவுகளுக் காக- எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் - பயன்படுத்தக் கூடியதுமாகும். மேலும் நகைக் கடன் வழங்குவதால் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வராக் கடன் என்ற பிரச்சனையே கிடையாது.  இவ்வளவு கடுமையான நிபந்தனைகள் ஏன்? நகைக்கடன் என்பது அதிக லாபம் ஈட்டும்  துறை ஆகும். ஆகவே, நகைக் கடன் நிபந்த னைகள் நெகிழ்வானதாகவும், கடனாளிகளுக்கு சாதகமாகவும் இருக்க வேண்டும். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட விதிமுறைகள், 1964 முதல் 2013 வரையிலான 59 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 32 சுற்ற றிக்கைகளுக்கு மாற்றான விரிவான தொகுப்பு என்ற பெயரால், மிகக் கடும் நிபந்தனைகளை தங்கக் கடன் வாங்குபவர்கள் மீது விதித்துள்ளது.  இந்த வழிகாட்டல்களின் தலைப்பு, ‘கருத்துக் கள் பெறுவதற்கான நகல்’ என்று இடப்பட்டு இருந்தாலும் பத்தி B (4) ‘இந்த உத்தரவுகள் வாயிலாக தரப்படும் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருப்பது முரண்பாடாக உள்ளது.  கடன் : மதிப்பு விகிதம் குறைப்பு சரியானதல்ல! கடன் : மதிப்பு விகிதம் (Loan to Value) ஏற் கெனவே உள்ள 80 சதவிகிதத்தில் இருந்து 75  சதவிகிதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக அறி கிறேன். இது கடன் அளவைக் குறைத்து, எதிர் மறை விளைவை உருவாக்கும். கடன் காலம் ஓராண்டு மட்டுமே என்பதால் கடன் : மதிப்பு விகிதம் 85 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல்களில் உள்ள  11-ஆவது பிரிவு ‘முறையான கடன் தகுதி பரி சீலனை மற்றும் கூர் ஆய்வு எல்லா விண்ணப்பங் களின் மீதும் நடத்தப்பட்டு, வழங்கப்படும் கடன், கடன்தாரரின் திரும்பச் செலுத்தும் திறனோடு பொருந்தியுள்ளதா என உறுதி செய்வது அவசியம்’  என்று கூறுகிறது. தங்கக் கடனைப் பொறுத்த வரையில் அது 100 சதவிகிதம் பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும். ஆகவே, கடன் தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வுசெய்ய வேண்டியதன் அவசியம் என்ன?  கந்து வட்டிக்காரர்களை  நோக்கி தள்ளிவிட வேண்டாம் ஆகப்பெரும்பாலான தங்கக் கடன்தாரர்கள் தினக்கூலிகளாக, நிலையான மாதச் சம்பளம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் வருமானத்திற்கான ஆவணச் சான்றைக் காண்பிப்பது என்பது, இயலாததாகும். ஆகவே, இந்த நிபந்தனை, ரிசர்வ் வங்கியின் விதி  முறைகளை முறையாக அமலாக்கக் கூடிய பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டு றவு வங்கிகள் ஆகியவற்றிடம் இருந்து கடன்தாரர் களை கந்து வட்டிக்காரர்களை நோக்கி தள்ளக் கூடியதாகும். எனவே, இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும்.  வழிகாட்டல்களில் 12-ஆவது பிரிவு கூறுவது: ‘எல்லா வருமான ஈட்டல் கடன்களுக்கும் மற்றும்  கடன் வழங்கும் நிறுவனம் தீர்மானிக்கும் அளவுக்கு மேலான நுகர்வு கடன்களுக்கும் இறு திப் பயன்பாட்டு ஆவணச் சான்று  கட்டாயமான தாகும்’. அவசரத் தேவைகளுக்காக வாங்கப்படும் நுகர்வுக் கடன்களுக்கு வரம்புகளைத் தீர்மானிக்க கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு. வருமான ஈட்டல் கடன்களில் விவசாயக் கடனும் அடங்கும்.  விவசாயிகள், நுகர்வோர்  நலன்கள் பாதிக்கப்படும் இப்படியிருக்கையில் எல்லா விவசாயக் கடன் தாரர்களும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேலான நுகர்வுக் கடன்தாரர்களும் அவர்களின் சொந்தக் கணக்கிற்கு நேரடியாகக் கடன் தொகை யைப் பெற இயலாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் தொகையை எந்த நிறுவனங்களிடம் இருந்து கடன்தாரர்கள் பொருட்களை வாங்குகிறார்களோ, அந்த நிறுவனங்களுக்கு செலுத்தி விடுகிறோம் என்ற நிலையை எடுக்கக்கூடும். இந்த நிபந்தனை, விவசாயிகளின் மற்றும் நுகர்வோர்களின் நலன்களைக் கடுமையாக பாதிக்கும். கடன் தொகையை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். ஆகவே இந்த நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும்.  பிரிவு 13- புதுப்பித்தல் கடனுக்கும், கூடுதல் கடனுக்கும், புதிதாக கடன் தகுதி பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக் கிறது. இதனால் கடன் வழங்கும் நிறுவனங்கள் புதிதாக நகை மதிப்பீடு மற்றும் செயல்முறை கட்ட ணங்களை செலுத்துமாறு நிர்பந்திக்கக்கூடும். இது கடன் தாரர்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுவதாகும். ஆகவே, புதிய கடன் தகுதி ஆய்வு க்கு கூடுதல் கட்டணங்களை கடன் தாரர்கள் மீது விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட வேண்டும்.  உறுதிமொழி ஆவணத்தையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும் பிரிவு 16 - உடமை உரிமை பற்றியதாகும். அது கீழ்க்காணும் நிபந்தனையை உள்ளடக்கி உள்ளது. ‘கடன் வழங்குபவர்கள் பிணைப் பொருள் மீதான உடமை உரிமையை பரிசோதித்ததற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பிணையாக வைக்கக்கூடிய தங்கத்தை வாங்கி யதற்கான மூல ரசீதுகள் இல்லாத பட்சத்தில், எவ்வாறு உடமை உரிமை தீர்மானிக்கப்பட்டது என்பதற்கான, பொருத்தமான ஆவணம்/உறுதிமொழி கடன்தாரரிடம் பெறப்பட வேண்டும்’. நகைகள் தனி நபர்களிடம் பல பத்தாண்டு களாய் இரண்டு மூன்று தலைமுறைகளாய் இருந்து வரும் என்பதும், அதற்கான மூல ரசீதுகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதும் பொது வாக அறியப்பட்டதே ஆகும். ஆகவே, ‘தங்கம் வாங்கியதற்கான மூல ரசீதைக் கோருவது’ எளிய  மக்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்படுவதை மறுப்பதை நோக்க மாகக் கொண்டதே என்ற அச்சம் எழுந்துள்ளது.  மூல ரசீதுகள் இல்லாத பட்சத்தில் மாற்று  ஆவணங்கள் கோருவது என்பதும் சிக்கலான வழிமுறையே ஆகும். இந்த நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக தற்போதுள்ள கடன் விண்ணப்பத்தின் அங்கமாக இருக்கிற சுய உறுதிமொழி முறையே தொடர வேண்டும்.  எதிர்கால வட்டியையும் சேர்த்து கணக்கிடுவது நியாயமல்ல! பிரிவு 21-இல் கூறியுள்ளபடி தங்க நாண யங்கள் பிணையாக வைக்கப்படும் பட்சத்தில் அவை, ‘வங்கிகளால் விற்கப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனை நீக்கப்பட வேண்டும்.  பிரிவு 25 (iii)-இல், கடன் கால முடிவில் ஒரே முறையாக செலுத்தப்படும் கடன்களுக்கான ‘கடன்- நகை மதிப்பு விகிதம்’ கணக்கிட, துவக்கத் தில் வழங்கப்படும் கடன் அளவிற்கு மாறாக, முதிர்வுக் காலத்தில் கடன்தாரரால் செலுத்தப்படும் மொத்த அளவை பொறுத்தே கணக்கிடப்படும்’ என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது  கடன்தாரரை கடுமையாக பாதிக்கும். துவக்கத்தி லேயே எதிர்கால வட்டியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் ‘கடன் - நகை மதிப்பு அளவு’ குறைந்து விடும். ஆகவே இந்த நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும்.  நகையை திரும்ப வழங்க 7 நாட்கள் அவகாசம் ஏன்? வழிகாட்டல்களில் உள்ள பிரிவு 45, ‘கடன்  வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கிளைகளிலேயே பிணையாக வழங்கப்படும் நகைகளை, அதற்கு  ஏற்ற பாதுகாப்பான சேமிப்பு பெட்டகங்களில் வைத்திருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களே அதை நிர்வகிக்க வேண்டும்’ என்று மிகத் தெளிவாக கூறுகிறது. அதே நேரத்தில் பிரிவு 49, ‘முழுக் கடனும் திரும்பச் செலுத்தப்பட்ட பின்னர், அதிகபட்சம் 7 வேலை நாட்களுக்குள் ளாக கடன் வழங்கும் நிறுவனங்கள் பிணையாக வைக்கப்பட்ட தங்கத்தை திரும்பவும் கடன்தாரர் கள்/ வாரிசுதாரர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறுகிறது. பிணையாக வைக்கப்பட்ட தங்கம் அதே வங்கிக் கிளையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போது, திரும்ப ஒப்படைப்பதற்கு எதற்காக 7 வேலை நாட்கள் தேவைப்படுகிறது? இது அபாயகரமான பிரி வாகும். முழுக் கடனும் திரும்பச் செலுத்தப்பட்ட நாளுக்கும், பிணை நகை திரும்ப ஒப்படைக்கப் படும் நாளுக்கும் இடையில் சில முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆகவே, இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும். கடன் திரும்பச் செலுத்தப்பட்ட நாளன்றே உடனடியாக பிணை நகையும் திரும்பத்தரப்பட வேண்டும்.  அனைத்து நிபந்தனைகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும் மொத்தத்தில் புதிய நகல் விதிமுறைகள், ஏற்கெனவே விலைவாசி உயர்வு, வேலை யின்மை, குறைந்த வேலை, விவசாயத்திற்கும், சிறு-குறு நடுத்தர தொழில்களுக்கும் ஆதர வின்மை போன்ற காரணிகளால் பாதிக்கப் பட்டுள்ள, சாமானிய மக்களின் வாழ்க்கையில் மேலதிக துயரங்களை கொண்டு வந்து சேர்ப்ப தாகும். அனைத்து எதிர்மறை நிபந்தனைகளும் திரும்பப் பெறப்படா விட்டால் அவர்கள் சொல் லொணாத் துயரங்களுக்கு ஆட்படுவதோடு, கந்துவட்டிக்காரர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகள் ஆகியவற்றை நோக்கித் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரு புறம் அதீத வட்டி விதிப்பதோடு, மறுபுறம் ரிசர்வ் வங்கி விதிமுறை களை சற்றும் லட்சியம் செய்யாதவை ஆகும்.  ஆகவே தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, அனைத்து எதிர்மறை நிபந்தனைகளையும் திரும்பப் பெறுமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.