tamilnadu

img

திருமானூரில் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

திருமானூரில் மார்க்சிஸ்ட் கட்சியில்  இணைந்தவர்களுக்கு வரவேற்பு

அரியலூர், ஜூலை 4 - திருமானூரில் ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையிலான குழுவி னர் குடிமனை மற்றும் குடிமனைப் பட்டா கோரும் பொதுமக்களின் மனுக்களை பெறு வதற்காக திருமானூர் ஒன்றியம் முழுவதும்  நேரடி சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது திருமானூர் பகுதிகளில் ஏராள மான பொதுமக்கள் குடிமனை, குடிமனை பட்டா கோரும் மனுக்களை மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜனிடம் வழங்கினர்.  அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேட்டுத்தெரு, அரண்மனைகுறிச்சி ஆகிய  இரண்டு கிராமங்களில் இருந்தும் ராஜ்குமார்,  மேகநாதன், கருப்புசாமி, சிவக்குமார் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இளை ஞர்களும், அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் கோரிக்கை மனுக்களை கொடுத்ததுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட னர். கட்சியில் இணைந்த இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் புத்தகங்கள் வழங்கி கௌரவித்து வரவேற்றார்.  இதில் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, திரு மானூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி சாமி துரை, மாவட்டக் குழு உறுப்பினர் எ.ஏசு தாஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பிள்ளை ராஜா, சுதாகர், ஆர்.புனிதன், சுப்புகார்த்தி, மூத்த தோழர் ஏ.சவுரிராஜன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.