பாஜக ஆளும் அசாம், சத்தீஸ்கர், ம.பி.யில் வெறியாட்டம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது!
முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் சென்னை, டிச. 25 - பாஜக ஆளும் சத் தீஸ்கர், அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை, எவராலும் ஏற்றுக்கொள்ள முடி யாதது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டி கை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரு கிறது. இந்நிலையில், அசாமில் நல்பாரி மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்து மஸ் குடில்கள் உள்ளிட்ட அலங்கார ஏற்பாடு களை விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் கும்பல் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது. இதேபோல சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரிலும் கிறிஸ்தவ கொண்டாட்டங் களுக்கு எதிராக இந்து அமைப்பினர் வன் முறையில் ஈடுபட்டனர். இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தமது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மை யினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது! பெரும்பான்மை என்ற பெயரில், சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்ப்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் 74 விழுக்காடு அதி கரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளி விவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டு மக்களைப் பிளவு படுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!”. இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள் ளார்.
