tamilnadu

img

தொழில்நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்துங்கள்! விஐடி விழாவில் தாய்லாந்து துணைத்தூதர் வேண்டுகோள்

தொழில்நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்துங்கள்! விஐடி  விழாவில் தாய்லாந்து துணைத்தூதர் வேண்டுகோள்

சென்னை, நவ.1-  விஐடி சென்னையில் அக். 31 முதல் நவ. 2 வரை நடைபெறும் “டெக்னோ விஐடி 2025” சர்வதேச தொழில்நுட்ப விழாவின் தொடக்க விழாவில், தாய்லாந்து துணைத்தூதர் ரச்சா அரிபர்க், இளைஞர்கள் தொழில்  நுட்பத்தை முதியோர் நலனுக்கும் குற்றங்களுக்கு எதிராகவும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். விஐடி துணைத்தலைவர் முனை வர் கோ.வி.செல்வம் தலைமையில் நடந்த விழாவில் பேசிய துணைத் தூதர், உலகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் இளை ஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே அறிவு இடைவெளி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். முதியவர்களுடன் இளைஞர்கள் சிறிது நேரம் செலவிட்டு அவர்களுக்கு தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பின்தங்கிவிடுவார்கள் என்றும் எச்சரித்தார். அறிவியல் மற்றும் பொறியியலுடன் தத்துவம் மற்றும் நெறிமுறைகளையும் கற்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இணைய மோசடி செய்பவர்கள் பெரிய சிக்கலை ஏற்படுத்துவதால், இளைஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் இணைய வேண்டும் என்றார். கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட எச்.சி.எல்.டெக் நிர்வாக துணைத்தலைவர் பிரின்ஸ் ஜெய குமார், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கணினி போன்ற துறைகளின் வளர்ச்சி அதி வேகமாக உள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா உல கின் தகவல் தொழில்நுட்ப சேவை தலைநகரமாக திகழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் பங்களிப்பால் புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். விஐடி துணைத்தலைவர் செல்வம் பேசுகையில், அமெரிக்காவின் புதிய கொள்கை மாற்றங்கள் காரணமாக உயர்கல்வி பயிலும் இந்திய மாண வர்களின் எண்ணிக்கை 44 சத வீதம் குறைந்துள்ளதாகவும், மாண வர்கள் இந்தியாவிலேயே கல்வி பயின்று உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் இறக்குமதி சார்ந்து இல்லாமல் சொந்தமாக உற்பத்தி செய்து நிலைமையை சமாளித்ததை எடுத்துக் காட்டிய அவர், தொழில்நுட்பப் பரி மாற்றம் மாணவர்களுக்கு அவசியம் என்றும், இது போன்ற நிகழ்வுகள் தலைமைப் பண்புகளை மேம்படுத்த சிறந்த வாய்ப்பு என்றும் கூறினார். ரோபோ ஷோ, டிரோன் ஷோ உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிகழ்வுகள் நடைபெறும் இந்த விழாவில், நாடு முழுவதிலும் இருந்தும், ஆஸ்திரேலியா, பிரேசில், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, உஸ்பெகிஸ்தான், போலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடு களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். வெற்றி பெறுப வர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். விழா நவம்பர் 2ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது.