சிறுமிகளிடம் சில்மிஷம்
தொழிலதிபர் கைது போக்சோ சட்டத்தில்
தூத்துக்குடி, மே 12-கோவில்பட்டியில் சிறுமிகளிடம் ஆபாசப் படங்களைகாண்பித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலதிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பு.முருகன்(58). தொழிலதிபரான இவர் தனதுசெல்போனிலிருந்த ஆபாசப் படங்களை காண்பித்து சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து, சிறுமிகள் பெற்றோரிடம் அளித்த தகவலையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனராம். அதன் பேரில், முருகன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.
ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்
காவலர்கள் தபால் வாக்குப்பதிவு
தூத்துக்குடி, மே 12-ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டுகாவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் உட்பட 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் பாதுகாப்புபணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு எட்டையபுரம் சிகேடி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 571 வாக்குகளில் மாலை 5 மணி வரை மொத்தம் 448 வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கீழப்பாவூர் பகுதியில் நாளை மின் தடை
நெல்லை, மே 12-கீழப்பாவூர் துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 14) மின்சாரம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது,இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளர் பா.கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கீழப்பாவூர் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணியையொட்டி, கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 14) காலை9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனதெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், பூலாங் குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக் கலப்பட்டணம், சுற்றுப்புறப் பகுதிகள்.