tamilnadu

எம்.ஏ. பேபி தலைமையில் சிபிஎம் குழு காஷ்மீர் பயணம்

எம்.ஏ. பேபி தலைமையில் சிபிஎம் குழு காஷ்மீர் பயணம்

புதுதில்லி, ஜூன் 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழுக் கூட்டம், கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பின் முதன்முறையாக புதுதில்லியில் உள்ள ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவனில் ஜூன் 3,4,5 தேதிகளில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைப் பயன் படுத்தி, பயங்கரவாதம், போர் வெறி மற்றும் வகுப்புவாத வெறுப்பைப் பரப்பும் முயற்சிகளுக்கு எதிராக ஜூன்  மாதத்தில் ஒரு வாரம் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனொரு பகுதியாக, கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையிலான குழு ஜூன் 10, 11 தேதிகளில் காஷ்மீர் செல்கிறது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அம்ரா ராம் எம்.பி. (மக்களவை); மத்தி யக்குழு உறுப்பினர் கே. ராதா கிருஷ்ணன் எம்.பி. (மக்களவை); மத்தி யக் குழு அழைப்பாளர் ஜான் பிரிட் டாஸ் எம்.பி. (மாநிலங்களவை); பிகாஷ்  ரஞ்சன் பட்டாச்சார்யா எம்.பி. (மாநி லங்களவை); சு. வெங்கடேசன் எம்.பி. (மக்களவை) மற்றும் ஏ.ஏ. ரஹீம், எம்.பி. (மாநிலங்களவை) ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். (மத்தியக்குழு அறிக்கை : பக்கம் 4)