tamilnadu

img

அறிவிக்கப்படாத யுத்தத்தை துவக்கியது அமெரிக்கா

அறிவிக்கப்படாத யுத்தத்தை துவக்கியது அமெரிக்கா

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது சட்டவிரோதமாக தாக்குதல்  சீனா, சவூதி அரேபியா, உலக நாடுகள் கடும் கண்டனம் உடனடி பதிலடி கடுமையாக இருக்கும் : ஈரான் எச்சரிக்கை  ரஷ்யாவுடன் ஆலோசிக்க ஈரான் வெளியுறவு அமைச்சர் விரைவு

டெஹ்ரான், ஜூன் 22 - ஈரான் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை துவக்கி, உலக அமைதிக்கு  மிகப்பெரும் பாதகத்தை  ஏற்படுத்தி யுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.  ஈரான் பதிலடி கொடுக்கத் தயாராகி வரும் நிலையில் உலகம் முழுவதும் பெரும் பதற்றச்சூழல் ஏற்பட்டுள்ளது.  ஜூன் 13ஆம் தேதி எவ்வித முன்னறி விப்பின்றி “ஆபரேஷன் ரைசிங்  லயன்” என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்கு தல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரா னின் முக்கிய விஞ்ஞானிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதனை தொட ர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் நடத்தி யது. இதனால் கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது. அமெரிக்கா தாக்குதல் ஈரானின் அதிநவீன ஏவுகணைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திணறிய நிலையில், இஸ்ரே லுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அறிவிக்கப்படாத போரில் இறங்கியுள் ளது. சனிக்கிழமை அன்று நள்ளிரவு ஈரான் நாட்டின் முக்கிய 3 அணு உலை களை நிலத்திற்கு அடியில் ஊடுருவிச் சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் வெடி குண்டுகள் மூலம் தகர்த்ததாக அமெரிக்கா அறிவித்தது.  இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப், தமது ட்ரூத் சோசியல் ஊட கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம். ஈரானுக்கு “அமைதி அல்லது சோகம்” இடையே  ஒரு தேர்வு உள்ளது. ஈரான் சமாதானம் செய்யாவிட்டால் அமெரிக்கா கூடுதல் இலக்குகளைத் தாக்கக்கூடும்” என பகிரங்க மிரட்டல் விடுத்தார்.  இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான் பர்தவ் நடான்ஸ் மற்றும் இஸ்ப ஹான் ஆகிய ஈரானின் முக்கிய அணு சக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய பின்னர், இஸ்ரேல் மீது ஈரான் குண்டுமழை பொழிந்தது. இந்த தாக்குதலில் ஜெருசலேம், டெல்அவிவ் உள்ளிட்ட நகரங்களின் 20% பகுதிகள் உருக்குலைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச் சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “போர் வெறி கொண்ட அமெரிக்கா அதன் நடவடிக்கைகளின் விளைவு களுக்கு முழு பொறுப்பாகும்.

ஈரா னுக்கு எதிரான அமெரிக்காவின் கிரி மினல் தனமான ஆக்கிரமிப்புச் செயலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கவும், ஐக்கிய நாடுகள் சபை யின் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டத் தின் விதிமுறைகளை மீறியதற்காக வாஷிங்டனில் உள்ள நிர்வாகம் பொறுப் பேற்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத் தைக் கூட்ட வேண்டும். இன்று ஈரான்.. நாளை வேறு எந்த நாடு?. இந்தத் தாக்குதல் உலக அமைதி சீர்குலை வுக்கு ஆபத்தான முன்னுதாரணம்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும், “இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்.

இதுவரை இல்லாத அளவுக்கு மோச மான பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி யாக இருக்கும். அதுவும் உடனடி யாக பதிலடி தரப்படும்” ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏமன் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்திய சில நிமிடங்களில்,  “போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம்” என்று ஈரானு க்கு ஆதரவாக ஏமன் ராணுவம் கள மிறங்கியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்களது கடல் எல்லை பகுதியிலிருந்து கப்பல்களை வெளி யேற்ற வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா செல்லும் ஈரான் அமைச்சர் அமெரிக்க தாக்குதலையெடுத்து ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஆலோச னை நடத்த ஈரான் வெளியுறவு அமைச் சர் அப்பாஸ் அரக்சி ரஷ்யா செல்ல வுள்ளார். ஞாயிற்றுக்கிழமை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில், “திங்கள்கிழமை  மாஸ்கோவிற்கு செல்ல உள்ளேன். தீவிர ஆலோசனைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார். பஹ்ரைனில் பதற்றம் அமெரிக்காவிற்கு சொந்தமான விமான மற்றும் கடற்படை தளம் பஹ்ரைன் நாட்டில் உள்ளது. இந்த அமெரிக்க ராணுவ தளங்கள் மீது  தாக்குதல் நடத்தபோவதாக ஈரான் நேரடியாக அறிவித்தது. இதனால் பஹ்ரைன் நாட்டின் கடல் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 சீனா, சவூதி கண்டனம் இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூலம் வெளியான அறிக்கையில், “ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை சீனா கடுமை யாக கண்டிக்கிறது. அமெரிக்காவின் இந்த  நடவடிக்கை ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் நோக்கங்களையும் கொள்கைகளை யும் கடுமையாக மீறுகிறது. மேலும் மத்திய கிழக்கில் பதற்றங்களை அதிகரிக்கிறது. மோத லில் ஈடுபட்டுள்ள தரப்பினரை, குறிப்பாக இஸ்ரேல், உடனே தாக்குதலை நிறுத்த வேண்டும். அதேபோல பொதுமக்களின் பாது காப்பை உறுதிசெய்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்க சீனா அழைப்பு விடுக்கிறது. மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஒருங்கி ணைக்கவும், நீதியை நிலைநிறுத்த தேவை யான முயற்சிகளை மேற்கொள்ளவும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது” என அவர் கூறினார். அதே போன்று சவூதி அரேபியாவின் வெளி யுறவுத் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சவூதி அரேபியாவின் சகோதர  நாடான ஈரானின் சமீபத்திய நிலையை கவ னித்து வருகிறோம். ஈரானின் அணுசக்தி நிலை யங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் கவலை அளிக்கிறது. பதற்றத்தைத் தவிர்க்கவும், கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய தீவிரமான சூழலைத் தணிக்கும் நோக்கத்தில், அரசியல் ரீதியில் தீர்வு காண வும், போரைத் தவிர்க்கவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

. டிரம்ப் பதுங்கல்? ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய நேரப்படி சனிக்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் உத்தரவிட்டார். பிறகு ஞாயிறன்று காலை டிரம்ப், ட்ரூத் சோசியலில் உரையாற்றி னார். அதன்பின்னர் டிரம்ப் எந்த பொது நிகழ்வு களிலும் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் வெள்ளை மாளிகை எந்த குறிப்பிட்ட சந்திப்புகளையும் பட்டியலிட வில்லை. ஈரான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் டிரம்ப் பதுங்கிவிட்டாரா? என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. பாதுகாப்பை அதிகரித்த அமெரிக்கா ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பல முக்கிய நக ரங்கள் மற்றும் மாகாணங்களின் அதிகாரி களும், தலைவர்களும் பாதுகாப்பு நட வடிக்கைகளை அதிகரித்து அச்சுறுத்தல்களைக் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. எப்பிஐ துணை இயக்குநர் டான் போங்கி னோ தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவை பாதுகாக்க நாங்கள் முழுமை யாக களமிறங்கியுள்ளோம். விழிப்புடன் இருக்கிறோம்” என கூறியுள்ளார். அதே போன்று நியூயார்க் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் உரு வாகி வரும் நிலைமையை நாங்கள் கண்காணி த்து வருகிறோம். மிகுந்த எச்சரிக்கையுடன், நியூ யார்க் முழுவதும் உள்ள மத, கலாச்சார மற்றும் தூதரக தளங்களுக்கு கூடுதல் படைகளை பயன்படுத்துகிறோம்” என அதில் கூறப்பட்டுள் ளது. “லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை, வழி பாட்டுத் தலங்கள் மற்றும் பிற முக்கிய பகுதி களுக்கு அருகில் ரோந்துப் பணிகளை அதி கரித்து வருகிறது” என லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண மேயர் கரேன் பாஸ் தெரிவித்தார். ஈரான் ஜனாதிபதியுடன் மோடி பேச்சு ஈரானின் தற்போதைய நிலைமை குறித்து அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஸ்கி யானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயி லாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் எக்ஸ் பதிவில்,“ஈரான் ஜனா திபதி மசூத் பெசெஸ்கியானுடன் உரையாடி னேன். தற்போதைய நிலைமை குறித்து விரி வாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து கவலை தெரிவித்தேன். நிலைமையை மீட்டெடுப்பதற்கும் உடனடியாக பதற்றத்தைக் குறைப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியாக அணுக வலியுறுத்தினேன்” என அவர் கூறியுள்ளார். ஈரானில் இதுவரை 865 பேர் பலி இதினிடையே, ஈரான் மீதான இஸ்ரேலிய  தாக்குதல்களில் இதுவரை 865 பேர் கொல்லப் பட்டனர். 3,396 பேர் காயமடைந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலில் இஸ்ரேலின் சேதங்கள் தொடர்பாக  முழுமையாக உறுதியாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.