ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா
தஞ்சாவூர், ஏப்.25- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, வியாழக்கிழமை அன்று குருவிக்கரம்பை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சேதுபாவாசத்திர வட்டாரக் கல்வி அலுவலர்கள் மா.க. இராமமூர்த்தி, சுப. சிவசாமி தலைமை வகித்தனர். விழாவில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. விழாவிற்கு சேதுபாவாத்திரம் ஒன்றியத்தின் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டினர்.