புதிய மாவட்டங்களில் ஆட்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க கோரிக்கை
வேளாண்மைத்துறை பணியாளர்கள் உண்ணாநிலை
சென்னை, ஏப். 25 - புதிய மாவட்டங்களில் ஆட்சி அலு வலர் பணியிடத்தை உருவாக்க கோரி வெள்ளி யன்று (ஏப்.25) சேப்பாக்கத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணி யாளர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலு வலகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சி அலுவலர் பணியிடம் உரு வாக்கப்பட வில்லை. எனவே, ஆட்சி அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும், தோட்டக்கலைத் துறையில் 17 மாவட்டங்க ளில் மட்டுமே ஆட்சி அலுவலர் பணி யிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களிலும் ஆட்சி அலுவலர் பணி யிடம் உருவாக்க வேண்டும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலு வலகங்களுக்கு அமைச்சுப் பணியிடம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் உ.சுமதி தலைமை தாங்கி னார். முன்னாள் மாநிலத் தலைவர் இரா.பன்னீர்செல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் கி.முத்துக்குமார் பேசினார். தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.