tamilnadu

img

தமிழ்நாடு செய்தித்தாள்  காகித ஆலையை பாதுகாக்க வேண்டும்!

தமிழ்நாடு செய்தித்தாள்  காகித ஆலையை பாதுகாக்க வேண்டும்!

ஒன்றிய - மாநில அரசுகளுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 18 - ஜிஎஸ்டி வரி உயர்வு, வெளி நாட்டு காகித இறக்குமதி, மூலதனச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய - மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: காகித ஆலைகளில் உலகளவில் முன்னணி கரூர் மாவட்டம், புகளூரில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறு வனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம் (Tamilnadu News Print And Papers Ltd- TNPL) 1979ம் ஆண்டு துவங்கப் பட்டு, தற் போது நவீன இயந்திரங்கள் பயன்பாட்டினால் ஆண்டொன்று க்கு 4,40,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உற்பத்தியை செய்து வரு கிறது.  உலகெங்கிலும் உள்ள கரும்புச் சக்கை அடிப்படையிலான காகித ஆலை உற்பத்தி நிறுவனங்களில் டி.என்.பி.எல். நிறுவனம் முன்னணி இடத்தை வகித்து வருவது குறிப்பிடத் தக்கது. சிமெண்ட், மின் உற்பத்திலும் தடம் பதித்து சாதனை இந்த காகித ஆலையிலிருந்து உரு வாகும் திடக் கழிவுகளான சுண்ணாம்பு, கசடு மற்றும் சாம்பல் ஆகியவற்றை பயன்படுத்தி 2013-ஆம் ஆண்டு சிமெ ண்ட் ஆலை தொடங்கப்பட்டு இதர சிமெண்ட் நிறுவனங்களுக்கு சவால்  விடக்கூடிய முறையில் ஒரு நாளைக்கு 900 டன் உயர்தர சிமெண்ட் உற்பத்தி யும் செய்யப்பட்டு வருகிறது. இதன் விரிவாக்கத்தின் தொடர்ச்சி யாக திருச்சி மாவட்டம் மொண்டிப் பட்டியில் 2015-ஆம் ஆண்டு 874 ஏக்கர் பரப்பளவில் டி.என்.பி.எல். அலகு 2 துவங்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு 2,00,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமானஉயர்தர காகித அட்டை உற்பத்தி யும் செய்யப்பட்டு வருகிறது.  இவையனைத்தும் சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பில்லாத வகையில் தயாரிக்கப்படுகின்றன. இவை தவிர, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இந்நிறுவனத்தின் சார்பில் காற்றா லைகள் நிறுவப்பட்டு 35.5 மெகா வாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு  வருகிறது.  30 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பு இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயில் கல்வி, மருத்துவம், வேளாண்மை உள்ளிட்டு பல வகை களில் மக்களுக்கு உதவிகளையும், சேவைகளையும் தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம்  புரிந்து வருகிறது. இந்த ஆலைகளில் நிரந்தர பணி யாளர்களாக 3000 பேரும், தினசரி ஒப்பந்த பணியாளர்களாக 5000-க்கு  மேற்பட்டோரும் பணிபுரிந்து வரு கின்றனர். ஒப்பந்ததாரர்கள், மூலப் பொருட்களை விநியோகம் செய்ப வர்கள், விற்பனையாளர்கள் என 20,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலனடைந்து வருகின்றனர். 40 ஆண்டுகளாக லாபமீட்டி வரும் நிறுவனம் இந்நிறுவனம் 40 ஆண்டு காலத் திற்கும் மேலாக லாபமீட்டி வருடந் தோறும் தமிழக அரசிற்கு ஈவுத்தொ கையை செலுத்தக் கூடிய நிறுவன மாக திகழ்ந்து வருகிறது.  சமீப காலமாக மூலப்பொருட் கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி  உயர்வு, தெற்காசிய நாடுகளி லிருந்து மலிவு விலையில் தங்கு தடையற்ற காகித இறக்குமதி ஆகிய வற்றின் காரணமாக இந்தியா முழு வதும் உள்ள காகித நிறுவனங்கள் சந்தை போட்டியை சமாளிக்க முடி யாமல் திணறி வருகின்றன. அதில் டி.என்.பி.எல். நிறுவனமும் ஒன்று.  சந்தைப் போட்டியால் எழுந்திருக்கும் நெருக்கடி ஒரு டன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஆலையின் காகிதம், தற்போது சந்தைப்போட்டியை சமா ளிக்க முடியாமல் 64 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டியது உள்ளது. இதனால் உற்பத்தி செலவினை கூட ஈடு செய்ய  முடியாமல் பெரும் நெருக்கடி களைச் சந்தித்து வருகிறது. இதே  நிலை நீடிக்குமானால், இந்நிறு வனத்தை நம்பி வாழும் குடும்பங்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியா கும் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, காகித உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.  வரியை குறைப்பதற்கும், தங்கு தடை யின்றி மலிவு விலையில் தெற்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் படும் காகிதங்களை கட்டுப்படுத்து வதற்கும் ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.  மேலும், டி.என்.பி.எல். நிறுவ னத்தை மேம்படுத்தவும், நவீன  கட்ட மைப்புகளை பலப்படுத்துவதற்கும் இத்துறையின் சார்பில் உரிய கவ னத்தை செலுத்தி தமிழக அரசின் பாரம்பரிய பொதுத்துறை நிறுவன மான டி.என்.பி.எல். நிறுவனத்தை யும், அதில் பணிபுரியும் தொழிலா ளர்களையும், இத்தொழிலை நம்பி வாழும் மக்களையும் பாதுகாத்திட வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.