states

img

வாக்குப்பதிவை கண்காணிக்க இணையவழி நேரலை

வாக்குப்பதிவை கண்காணிக்க இணையவழி நேரலை

வெப்-காஸ்டிங் எனப்படும் இணையவழி நேரலை மூலமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவைக் கண் காணிக்கும் முறையை அறிமுகம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அண்மைக் கால நடவடிக்கைகள், வாக்குப் பதிவில் உள்ள குறைபாடுகள் அதன் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி களை எழுப்பிய போதும் தேர்தலின் நம்ப கத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை களை முன்னெடுக்கவில்லை. இந்நிலை யில் வாக்குச்சாவடிகளில் இணையவழி நேரலை எனப்படும் வெப்காஸ்டிங் மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்ட அளவில் தேர்தல் அதிகாரிகள், கண்காணிப்பு மையத்தில்அமர்ந்தவாறே  வாக்குப்பதிவை கண்காணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வாக்குச் சாவடிக ளிலும் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்யும் நடைமுறையும் உள்ளது. ஆனால் வாக்குப்பதிவு தொடர்பான சந்தே கங்கள் கேள்விகள் எழுப்பப்படும் போது குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பதிவு செய்யப் பட்ட காணொலிகளை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.