tamilnadu

img

வேளச்சேரியில் பிரச்சாரம் : கே. பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

வேளச்சேரியில் பிரச்சாரம் : கே. பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

விலைவாசி உயர்வு, வேலையின்மைப் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல், மதவெறுப்பை தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளர்ச்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனொரு பகுதியாக, சென்னை வேளச்சேரி பகுதி காமராஜ் நகரில் கிளர்ச்சி பிரச்சாரத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் எஸ். முகமது ரபி, மாவட்டக்குழு உறுப்பினர் என். குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.