அமர்நாத்தில் கூடுதல் சோதனைச் சாவடிகள்
அமர்நாத் யாத்திரை துவங்க உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கூடுதல் சோத னைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடை யாளம் காணுமாறு காவல்துறைக்கு அமர் நாத் வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மோடி அரசாங்கத்தின் ஆட்சியில் நாடு முழுவதும் பாதுகாப்பு குறைபா டுகள் உள்ளதாக தொடர் குற்றச்சாட்டு கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு குறை பாடுகளின் காரணமாக நடைபெறும் விபத்துக்களும் தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற கும்பமேளாவில் சாதாரண பொதுமக்க ளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான துயரம் நடந்தது. அதே போல பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாதுகாப்பு குறைபாடே காரணம் என பாஜக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் தான் ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை 38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் ளாகியிருக்கிறது அரசு.