மோடியை சந்தித்துப் பேசாத டிரம்ப் பாகிஸ்தான் தளபதிக்கு முன்னுரிமை
தொலைபேசி உரையாடல் குறித்த தகவலிலும் முரண்
புதுதில்லி/வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் நடத்திய உரையா டல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை மீது கேள்வி கள் எழுந்துள்ளன. இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே மோதல் ஏற்பட்ட போது வணிகம் தொடர்பான விசயங்க ளை பேசி நான் தான் இரு நாட்டுக்கும் இடை யேயான போரை நிறுத்தினேன் என டிரம்ப் 14 முறைக்கு மேல் கூறியுள்ளார். ஆனால் பிரதமர் மோடியோ, பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டதால் தான் போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என கூறியிருந்தார். இஸ்ரேல்-ஈரான் மீது நடத்தி வரும் தாக்கு தலின் போது கூட, இந்தியா-பாகிஸ்தான் மோதலை வணிகப் பேச்சுவார்த்தை மூலம் தான் நிறுத்தினேன் என டிரம்ப் குறிப்பிட்டார். சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தரப்பும் அமெ ரிக்காவின் தலையீட்டின் காரணமாகவே இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது எனக் கூறி இருந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தின. டிரம்ப் எத்தனை முறை நான் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என சொன்னாலும் மோடி அமைதியாகவே இருந்து வந்தார். இந்நிலையில் ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட மோடி அம் மாநாட்டில் கலந்து கொண்டு டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியை சந்திக்காமல் மாநாட்டின் பாதியிலேயே டிரம்ப் வெளியேறி னார். இதன் பிறகு செவ்வாய்க்கிழமையன்று டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியதாகவும், அதில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலமாகவே போர் நிறுத்தம் நடந்தது, வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. அமெரிக்காவின் பேச்சு வார்த்தையின் காரணமாக போர் நிறுத்தப்பட வில்லை. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா வுக்கு எந்தப் பங்கும் இல்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக டிரம்ப்பிடம் கூறியதாக வும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் மிஸ்ரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை. கடந்த 37 நாள்க ளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விளக்கம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில், மோடி டிரம்ப்புடன் நடத்திய தொலை பேசி பேச்சுவார்த்தை குறித்த விசயத்தில் முரண் உள்ளது என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கைக்கும் இந்திய வெளியு றவுச் செயலரின் அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புத் தொடரை கூட்ட வேண்டும். நாளையே அனை த்துக் கட்சி கூட்டத்தை கூட்டி டிரம்ப்பிடம் பேசி யது பற்றி மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பாக் தளபதிக்கு முன்னுரிமை பிரதமர் மோடியை சந்திக்காத டிரம்ப், பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கிறது என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானின் ராணு வத்தளபதி அசிம் முனீர் உடன் உணவு சாப்பிட நேரம் கொடுத்துள்ளார். ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் பாகிஸ்தான் உடனான ராணுவ உறவுகள் குறித்து அமெ ரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்து வார் என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு தான் குற்றவாளி என்று இந்திய அரசாங்கம் குற்றம்சாட்டி வருகிற நிலை யில் அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைவர் ஜெனரல் மைக்கேல் குரில்லாவும் பயங்கரவா தத்தை எதிர்ப்பதில், பாகிஸ்தான் ஒரு தனித்துவ மான கூட்டாளி என்று தெரிவித்துள்ளார். இது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை யின் பலம் மீதான கேள்விகளை எழுப்பி யுள்ளது.