tamilnadu

தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே துவங்குகிறது : அந்தமான் - மே 13; கேரளம் - மே 27

தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே துவங்குகிறது  : அந்தமான் - மே 13; கேரளம் - மே 27

சென்னை, மே 12 - தென்மேற்கு பருவமழை அந்த மான் கடல் பகுதியில் செவ்வாய் (மே  13) அன்றும், கேரளத்தில் மே 27 அன்றும் துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் சுட் டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப் பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை  வெயில் சுட்டெரிக்கிறது.  இந்த நிலையில், தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. ‘தெற்கு அந்தமான் கடல், நிகோ பார் தீவு, தென்கிழக்கு வங்கக்கடல் பகு திகளில் மே 13 அன்றும், கேரளத்தில் மே  27 அன்றும் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.  கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன்  7-ஆம் தேதியும், 2024-ஆம் ஆண்டில்  மே 30 ஆம் தேதியும் தென்மேற்குப் பரு வமழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டு 4 நாட்கள் முன்னதாகவே தொடங்க உள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பொதுவாக ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை தென்மேற்கு பருவமழை காலமாக கணக்கிடப்படு கிறது. வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரை, கேரளத்தில் பருவ மழை தொடங்குவதன் அடிப்படை யிலேயே, பருவகால மழைப்பொழிவு, புயல் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து வருகிறது. தமிழகத்திற்கு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவகாலம்தான் அதிக மழை தரும்  பருவம். இந்த காலகட்டத்தில் சராசரி யாக 44 செ.மீ. மழை கிடைக்கும். கடந்த ஆண்டில், தென்மேற்குப் பருவமழைக் காலத்திலேயே தமிழகத்துக்கு ஓரளவு நல்ல மழை கிடைத்தது.  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவ காலத்தில் வழக்க மாக 32 செ.மீ. மழை கிடைக்கும். கடந்த ஆண்டு 39 செ.மீ. மழை கிடைத்தது. சில ஆண்டுகளாக- வடகிழக்கு பருவ மழை பொய்க்கும் போது, தென் மேற்கு பருவ மழைதான் தமிழக மக்களுக்கு கைகொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.