tamilnadu

img

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,அக்.24- தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட் டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இத னால் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ் சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங் கள் மற்றும் காரைக்கால் பகு திகளில் ஓரிரு இடங்களில் அக்டோபர் 25 அன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகள் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதி களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகு திகளுக்கு செல்ல வேண் டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.