districts

img

அத்தியாவசியப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக வழங்குக!

தஞ்சாவூர், அக்.24 -  ஏழை எளிய மக்களின் நலன் கருதி, தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு, ரேஷன் கடைகளில் அத்தியாவ சியப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் மார்க்கெட் அருகில் செவ்வாயன்று நடை பெற்ற போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், மாவட்ட துணைத் தலைவர் எஸ். வனரோஜா, மாநகரத் தலைவர் புனிதா மற்றும் டி.வசந்தி, மகேஷ்வரி, சரிதா உள் ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.