districts

img

கொத்தங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்

மயிலாடுதுறை, அக்.23- மயிலாடுதுறை மாவ ட்டம் தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவ தில் அலட்சியம் காட்டுவதா கவும் உடனடியாக அடிப்ப டை வசதிகளை செய்துத்தர வேண்டுமெனவும் மார்க்சி ஸ்ட் கட்சியினர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்தனர்.  கொத்தங்குடி ஊராட்சிக் குட்பட்ட நீலவெளி, அரும் பாக்கம், நெய்வாசல், மாதா கோவில்தெரு, வேலம் புதுக்குடி உள்ளிட்ட ஊரா ட்சிப் பகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் முறை யாக செய்துதரவில்லை என்றும், உடனடியாக உரிய ஆய்வு மேற்க்கொண்டு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என வும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொத்தங்குடி கிளை செய லாளர் அம்புரோஸ் தலை மையில் ஊராட்சி தலைவர் தம்புமோகன், ஊராட்சி செயலர் ஆகியோரிடம் கோ ரிக்கை மனு அளிக்கப் பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வெண்ணி லா, மாவட்டக்குழு உறுப்பி னர் டி.ஆர்.ராணி, ஒன்றியக் குழு உறுப்பினர் என்.சந்திர மோகன், வாலிபர் சங்க தரங் கம்பாடி ஒன்றியச் செயலா ளர் பவுல்சத்தியராஜ் மற்றும் கிளை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.