districts

img

சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக சி.பாஸ்கர் தேர்வு அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட தீர்மானம்

தஞ்சாவூர், அக்.24 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றிய 15 ஆவது மாநாடு செங்கிப்பட்டி ஓவியா திருமண மண்டபத்தில், தோழர் சீத்தாராம் யெச்சூரி, தோழர் சங்க ரய்யா நினைவரங்கில் புதனன்று நடைபெற்றது.  மாநாட்டுக்கு சோலை.ரமேஷ், எம்.ஜி.சரவணன், மலர் கொடி ஆகியோர் தலைமை வகித்தனர். கே ராஜகோபால் கொடியேற்றினார். கே.மருத முத்து அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கே.தமிழரசன் வர வேற்றார். ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் வேலை அறிக்கை முன்வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர் மனோகரன். எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சிவகுரு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநாட்டில் 15 பேர் கொண்ட ஒன்றியக்குழுவும், ஒன்றியச் செயலாளராக சி.பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக் கொண்டான் கால்வாய்களின் பாசன விவசாயிகளை பாது காத்திட நிரந்தர தீர்வு காண வேண்டும், பூதலூர் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படவும், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சானூரப் பட்டி கடைவீதியில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் மாலை நடைபெற்றது.