tamilnadu

img

வணிக வளாகத்தில் தேங்கும் நீரை அகற்றுக சிறுகடை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

வணிக வளாகத்தில் தேங்கும் நீரை அகற்றுக  சிறுகடை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூன் 12-- சென்னை மாநகராட்சி எம்.சி. ரோடு வணிக வளாக சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் 19ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் தலைவர் கே.செல்வானந்தன் தலைமையில் நடைபெற்றது. பி.சிவகாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் கே.காசிம் வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.பாலைய்யா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் எஸ்.கோபால கிருஷ்ணன், ஜி.மோனிஷா, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக நகர விற்பனைக்குழு உறுப்பினர் கே.பலராமன் வரவேற்றார். துணைத்தலைவர் ஆர்.ராதா கிருஷ்ணன் நன்றி கூறினார். தீர்மானங்கள் வணிக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் ஷட்டர் (கதவு) அமைத்து கொடுக்க வேண்டும், முறையாக குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு கவுரவத் தலைவராக கே.பலராமன், தலைவராக கே.செல்வானந்தன், செய லாளராக கே.காசிம், பொருளாளராக எஸ்.பாலையா உள்ளிட்ட 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.