tamilnadu

img

தொழிற்சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு திட்டம்

தொழிற்சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு திட்டம்

உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 20 - தமிழ்நாட்டில், குறிப்பாக பட்டாசு உற்பத்திக்கு  பெயர் பெற்ற சிவகாசி பகுதியில் நிகழும் தொடர்ச்சியான தொழிற்சாலை விபத்துக்கள், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை யைச் சீரழித்து வருகின்றன. 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத் தில் மட்டும் 131 உயிரிழப்புகளும், 146 பேருக்கு  தீவிர காயங்களும் ஏற்பட்டுள்ளன.  இந்த அவல நிலையை உணர்ந்து, சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளை, விபத்தில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு முறையான மறுவாழ்வுத்  திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. நீதிபதி பி.புகழேந்தி தனது தீர்ப்பில், விபத்து களின் இந்த தொடர்ச்சியான போக்கு, ஆய்வுகள்,  சட்ட அமலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஒரு நீண்ட கால குறைபாட்டையே  சுட்டிக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். ஒழுங்குமுறை அமைப்புகள், அரசியலமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவின் கீழ் குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க தங்கள் கடமை களைச் செய்யத் தவறிவிட்டன என்றும் குறிப்பிட் டுள்ளார். வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருள் விதிகள் 2008 ஆகியவற்றின் கீழ் பட்டாசு  உற்பத்தி, வைத்திருத்தல் மற்றும் விற்பனை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் 15  கிலோவுக்கு மிகாமல் வெடி பொருட்களை உற்பத்தி செய்ய உரிமம் வழங்க அதிகாரம் பெற்று உள்ளனர். இருப்பினும், மாவட்ட வருவாய் அலு வலர்கள் தங்கள் அதிகார வரம்பிற்கு அப்பாற் பட்டு உரிமங்களை வழங்கியிருப்பது வெளிச்சத் திற்கு வந்துள்ளது. சிவகாசி நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தி யில் 90 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கிறது. விருதுநகர் மாவட்டம், நிதி ஆயோக் அமைப்பால் “வளர்ச்சி குன்றிய மாவட்டம்” என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடுமை யான நிலத்தடி நீர் பற்றாக்குறை, குறைந்த விவசாய நடவடிக்கைகள் உள்ளன. 2014 ஆம் ஆண்டு சிவகாசி, எட்டக்காபட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தங்கள் கணவர்களை இழந்த நான்கு பட்டி யல் சாதிப் பெண்கள் தாக்கல் செய்த மனுவை  நீதிமன்றம் விசாரித்தது. நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையை தலா ரூ. 10 லட்சமாக உயர்த்தி, எட்டு  வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை செலுத்த அரசுக்கு உத்தரவிட்டது. தொழில்துறை பாதுகாப்பு  மற்றும் சுகாதாரம் வெடிபொருள் சட்டம், வெடிபொருள் விதிகள்,  தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தொழிற்சாலை கள் விதிகள் ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு விதி முறைகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநருக்கு உத்தரவிட்டது.  சிவகாசி மற்றும் பிற பட்டாசு உற்பத்தி மையங்களில் உரிமம் வழங்கும் நடைமுறைகளை ஆய்வு செய்யவும், சட்டப்பூர்வ வரம்புகளுக்கு அதிகமாக உரிமங்கள் வழங்கப்பட்ட இடங்க ளில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவும் வெடி பொருள் தலைமை கட்டுப்பாட்டாளர் (நாக்பூர்) நட வடிக்கை எடுக்க வேண்டும். வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட தீ விபத்துக்களை போதுமான  தொழில்நுட்ப அறிவு கொண்ட பணியாளர்களால்,  தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்கு நருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.