சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை
சென்னை, பிப்.27 - சென்னை உயர் நீதி மன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மார்ச் 5 ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரது வாரி சாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மா திகாரி, நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்ற வர். 1992-இல் வழக்கறிஞ ராக தொழில் தொடங்கிய வர். 2016-இல் மத்தியப்பிர தேச உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், 2018-இல் நிரந்தர நீதிபதி யாகவும் நியமிக்கப்பட்டார். 2025 ஏப்ரலில் கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட அவர், தற் போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்புக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ நிய மன உத்தரவு பிறப்பிக்கப் படும்.
