tamilnadu

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை முக்கிய செய்திகள்

கொரோனாவிற்கு போக்குவரத்து தொழிலாளி பலி

இராமநாதபுரம், ஜூலை 3- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கிளையில் அரசு பேரூந்து ஓட்டுநராக பணியாற்றிய  எஸ்.சண்முகவேல் (56) கொரானா நோயால் ஜூன் 30 அன்று அன்று சிவகங்கை அரசு மருத்துவ மனையில் உயிரிழந்துள்ளார். போக்குவரத்து நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து பேருந்துகளை இயக்காததும், 50 வய துக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்கக்கூடாது என்ற விதிமுறை கள் பின்பற்றப்படாததாலும் தன்  தொழி லாளி இறந்துள்ளார். போக்குவரத்து அதி காரிகளின் பொறுப்பற்ற செயல்பாட்டால் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளதாகவே கருது கிறோம்.  மரணமடைந்த போக்குவரத்து தொழிலாளிக்கு தமிழக அரசு  ரூ.50 லட்சம் கொரோனா காப்பீடு நிதி வழங்க வேண்டும். பொறுப்பற்ற முறையில் பணி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உரிய பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்து, கொரானா பரிசோதனை எடுத்த பின் பணி வழங்க வேண்டுமென சிஐடியு இராமநாதபுரம் மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி கேட்டுக்கொண்டுள் ளார்.

சிவகங்கையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜூலை 3- பொதுத்துறையை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி சிவகங்கை யில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை பணிமணை முன்புகிளைச் செயலாளர் சமயத்துரை தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் வீரையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காரைக்குடியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார, அழகர்சாமி, வெங்கிடு, ஜெகந்நாதன், ஏஐடியுசி பி.எல். ராமச்சந்திரன், ராஜா, ராஜா, ஐஎன்டி யூசி  ரமேஷ்  ஆகியோர் கலந்துகொண்ட னர். காரைக்குடி பணிமனை முன்பு சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் சிவக்குமார், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் குமார்,  பிரசாத், மாவட்டத்தலைவர் திருநாவுக் கரசு ஆகியோர் தலைமையிலும், திருப் புத்தூரில் சக்திவேல், தேவகோட்டை யில்  பொருளாளர் தியாகராஜன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜூலை 3- மின்வாரியத்தை தனியார்மய மாக்ககூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது.பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அமைப்பு சாரத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிவ கங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில்  சிஐடியு மாவட்டச் செயலாளர் வீரையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு மாவட்டத் தலைவர் உமாநாத், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் காளைலிங்கம், உலகநாதன், வேங்கையா, சகாயம் ஆகியோர் கலந்து கொண்டனர். காரைக்குடியில் சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தெட்சிணாமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் சிவக்குமார், அழகர்சாமி, வெங்கிடு ஆகி யோர் கலந்து கொண்டனர். சிவகங்கை யில் மின்வாரிய தொழிலாளர்கள் சங்க  சிஐடியு மாவட்டச் செயலாளர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல செயலாளர் உமாநாத், தொமுச மாவட்டச் செயலாளர் முருகேசன், கோட்டச் செயலாளர் செல்வக்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர். காளையார்கோவிலில் கோட்ட இணைச் செயலாளர் தனபால், மறவமங்கலத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி, தேவகோட்டையில் மாவட்டத் துணைச் செயலாளர் அண்ணாத்துரை, திருப்புத்து ரில் கோட்டச் செயலாளர் வீரமுத்து, திருப்பு வனத்தில் மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ் கண்ணன், மானாமதுரையில் கோட்ட இணைச்சேயலாளர் கணேசன் மறவமங்கவத்தில் கோட்ட இணைச் செயலாளர் டேவிட்செபஸ்தியான், எஸ்.புதூரில் கோட்டத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.