tamilnadu

img

யார் பதில் சொல்ல வேண்டுமோ அவர்களே ஆதாரங்களை அழிக்கிறார்கள் தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

யார் பதில் சொல்ல வேண்டுமோ அவர்களே ஆதாரங்களை அழிக்கிறார்கள் தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வாக்குச்சாவடிகளில் பதிவு  செய்யப்பட்ட சிசிடிவி  காட்சிகளை, வாக்குப் பதிவு முடிந்த 45 நாட்களில் அழித்துவிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணை யம் சமீபத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. இதற்கு நாடு முழு வதும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலை யில், தேர்தல் ஆணையம் கேள்வி களுக்கு பதில் அளிக்காமல் ஆதாரங் களை அழிக்க முயல்கிறது என மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்ச்சாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”வாக்காளர் பட்டியல் கேட்டால் இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க  மாட்டோம் என்கிறது தேர்தல் ஆணையம். சிசிடிவி காட்சிகள்  கேட்டால் சட்டத்தை மாற்றி மறைத்து விட்டோம் என்று கூறப்படுகிறது. தேர்த லின் புகைப்படம் - வீடியோ கேட்டால்  இப்போது 1 வருடத்தில் அல்ல, 45 நாட்க ளில் அழித்துவிடுவோம் என்று புதிய விதி யும் கொண்டு வரப்பட்டுள்ளது. யார் பதில்  சொல்ல வேண்டுமோ அவர்களே ஆதா ரங்களை அழிக்கிறார்கள். இப்போது தெளிவாகிறது. தேர்தலில் மேட்ச் பிக்சிங்  செய்யப்படுகிறது. மேலும் ஒரு சம ரசம் செய்யப்பட்ட தேர்தல், ஜனநாயகத்  திற்கு விஷம்” என ராகுல் காந்தி குற்றம்  சாட்டியுள்ளார்.