tamilnadu

‘சங்கத்தின் கம்பீரத்தை பாதுகாத்தவர் ஆர்.சீனிவாசன்’

‘சங்கத்தின் கம்பீரத்தை பாதுகாத்தவர் ஆர்.சீனிவாசன்’

சென்னை, ஜூன் 12 - சங்கத்தின் கம்பீரத்தை பாதுகாத்த தோழர் ஆர்.சீனிவாசனின் இழப்பு ஈடு செய்ய இயலாதது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.சீனி வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தோழர் ஆர்.சீனிவாசன் அரசு ஊழியர் சங்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து உறுப்பினராகவும், முன்னணி ஊழியராகவும், சென்னை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மாநி லச்செயலாளராக பொறுப்பேற்று ஸ்தாபனம் மற்றும் போராட்ட இயக்க நடவடிக்கைகளில் போர்க் குணமிக்கவ ராகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். அமைப்பிற்கு மிக நெருக்கடியான காலகட்டத்தில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு ஊதிய மாற்றத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைந்தி டவும், நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு முன்வராதபோது, மாநில நிர்வாகிகள் உட்பட 25 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதன்பிறகும் பிரச்சனையை தீர்க்க முன்வராத போது பேரணியாக முதல்வரை நோக்கி சென்றபோது, காவல் துறை தடியடி நடத்தியது. காவல்துறையின் அடக்குறைக்கு அஞ்சாமல் தைரியமூட்டி தோழர்களை திரண்டெழச் செய்து அரசை பணிய வைத்தார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கம்பீரத்தை பாதுகாத்த தோழரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தோழர் சீனிவாசன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி,  தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் மு.பாஸ்க ரன், பொருளாளர் சா.டானியல் ஜெயசிங், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச்செய லாளர் பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.