உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்
உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ள தமிழக அரசு, “இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு களுக்கு புதிய உந்துதலை அளிக்கும். ஆர். பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப் பணி வல்லுநரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், “ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. திராவிட மொழிக் குடும்பத்தின் பரவல், சிந்து சம வெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கி யங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப் பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. தமிழ் குறித்து தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆர்.பாலகிருஷ்ணன் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், அர சியல் பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். முகநூலிலும் அவருக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வரு கின்றனர்.