கவிஞர் நந்தலாலா மறைவு: முதல்வர், தமுஎகச இரங்கல்
தமுஎகச மாநிலத் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா மறைவுக்கு, தமுஎகச தனது அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் தெரி வித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சோலைக்குயில்கள் என்ற இலக்கிய இதழை திருச்சி தோழர் களுடன் இணைந்து நடத்தி வந்தார். தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று திறந்தவெளிக் கூட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களிடம் பேசி வந்தார். அவர் பேசாத மேடை இல்லை, கால் படாத மாவட்டம் இல்லை. அவருடைய அறி வார்ந்த, அங்கதம் மிகுந்த உரைகளுக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தமிழ கத்திலும் உலகின் பல நாடுகளிலும் உண்டு. தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா, கல்வி உரிமை மாநாடு, மொழியுரிமை மாநாடு, வள்ளலார் 200, வைக்கம் 100 ஆகிய நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர் தோழர் நந்தலாலா. திருச்சியின் சொல்லப் படாத வரலாறுகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந் தார்.
அவர் தொகுத்த “நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி” என்கிற நூலும் அவர் விகடன் மின்னிதழில் எழுதி நூலாக்கம் பெற்ற ”ஊறும் வரலாறு” நூலும் அதற்குச் சான்றாக நிற்கின்றன. இன்னும் பழைய வர லாறுகளைத் தேடித் தொகுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவை முற்றுப்பெறும் முன்பே அவரது வாழ்வு முடிந்துவிட்டது தமிழ்ச் சமூகத்திற்குப் பேரிழப்பு. தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர லைகளிலும் சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்று மதச்சார்பற்ற, பகுத்தறிவு சார்ந்த, இடதுசாரி கருத்தியலை வலுவாக முன்னெ டுத்தார். பட்டிமன்றங்களில் நடுவராகவும், அவருக்குத் தனித்த இடமும் மரியாதையும் எப்போதும் உண்டு. இந்தியன் வங்கி ஊழி யர் சங்கத்தின் தொழிற்சங்கப் பணிகளிலும் போராட்டங்களிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருச்சி மாவட்டத்தின் பண்பாட்டு வரலாற் றில் தவிர்க்க இயலாத ஆளுமையாக, அனைத்து சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த வர்களுடனும் இணக்கமான நல்லுறவைப் பேணி, அதை தமுஎகசவின் வளர்ச்சிக்காகத் திறம்படப் பயன்படுத்தியவர். களம் போன்ற பரந்த மேடைகள் பல கருத்தியல் தளத்தில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி யவர். இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருந்து தமிழ்ப் பணியாற்றும் அறிவாற்றல் கொண்டி ருந்த தோழர் நந்தலாலா இப்படி மரணம டைந்தது தமிழக முற்போக்குக் கலை இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா கும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது இணையர் திருமதி ஜெயந்தி, அன்பு மகள்கள் பாரதி, நிவேதிதா, பேரக் குழந்தை கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தமுஎகச ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவித்துள்ளனர். முதல்வர் இரங்கல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில், “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் எனக் கவிஞர் நந்தலாலாவின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும், அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்ற வர் அவர். காவிரிக் கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள் தனது ஊரான திருச்சி யின் மீது கொண்ட தீராக்காதலுக்கு, “திருச்சி ராப்பள்ளி: ஊறும் வரலாறு” நூலே சான்றா கும். அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம். என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பரந்த மனத்தோடும் அன்போடும் வாழ்த்திப் பேசியதையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனை யளிக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.