tamilnadu

கொறடா அருளை நீக்குமாறு பாமக எம்.எல்.ஏ.க்கள் மனு

கொறடா அருளை நீக்குமாறு பாமக எம்.எல்.ஏ.க்கள் மனு

சென்னை, ஜூலை 4- பாமகவில் தந்தை மகனுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாக வும் பேசி வருகின்றனர். இதனி டையே, மூச்சு உள்ளவரை பாமக  தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு  குழந்தை போல ராமதாஸ் மாறி விட்டார் என்று அன்புமணியும் பேசி  வருகிறார்கள். அன்புமணி ஆதர வாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.  இந்நிலையில், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி  அன்புமணி அறிவிப்பு வெளி யிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து,  செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது.  அருளை நீக்கும் அதிகாரம் அன்பு மணிக்கு இல்லை. எம்.எல்.ஏ. க்களை நீக்க பாமக கொறடா தான் பேரவை தலைவருக்கு பரிந்துரை  செய்ய முடியும் என்று கூறியிருந் தார். இதைத் தொடர்ந்து, சட்டமன்ற கொறடா அருளை மாற்றக்கோரி பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்க டேஸ்வரன், சதாசிவம், மயிலம்  சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர்  பாலு ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) சட்டப்பேரவை செய லாளரை சந்தித்து மனு அளித் துள்ளனர். புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை நியமிக்கவும் வலியுறுத்தினர்.  என்னை நீக்க முடியாது அதே நேரத்தில் ஜி.கே. மணி  அனுமதி இல்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று  அருள் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார். மேலும் அருள் எம்.எல்.ஏ.  பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து மனு அளிக்க உள்ளார். பாமக சட்டப்பேரவை குழுத் தலை வர் ஜி.கே. மணி, அருள் கொறடா வாக தொடர்வார் என்று அளித் திருக்கக் கூடிய கடிதத்தை பேர வைத் தலைவரை சந்தித்து நேரில்  வழங்க உள்ளார்.