tamilnadu

img

மோடி அரசே, தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக! தமிழகம் முழுவதும் சிஐடியு ஆவேச மறியல் - கைது!

மோடி அரசே, தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக! தமிழகம் முழுவதும் சிஐடியு ஆவேச மறியல் - கைது!

சென்னை, டிச. 23 - ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.23) மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் நடைபெற்றது. கடந்த 2020-ஆம் ஆண்டு, கொரோனா பொதுமுடக்க காலத்தில், நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் எதுவும் நடத்தாமலேயே 4 புதிய தொழிலாளர் சட்டங்களை (Four Labour Codes) மோடி அரசு நிறைவேற்றியது. இவற்றை 5 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது அமல்படுத்தியுள்ளது. 12 மணி நேரம் வரை தொழிலாளியிடம் வேலை வாங்கலாம்; தொழிலாளியின் சம்மத மின்றி 3 மாதத்திற்கு 125 மணி நேரம் வரை ஓவர் டைம் வேலை வாங்கலாம்; சட்டச் சலுகைகள் இல்லாமல் 50 பேர்களைக் கூட ஒப்பந்தத் தொழி லாளர்களாக வைத்திருக்கலாம்; ரூ. 18  ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் தொழி லாளர்களாக கருதப்படமாட்டார்கள்; அவர் களுக்கு அடிப்படைச் சம்பளத்தை அரசு நிர்ண யிக்க வேண்டியது கட்டாயமல்ல; 40 தொழி லாளர்களுக்கு குறைவாக பணியாற்றும் நிறு வனங்கள் இனி தொழிற்சாலை சட்டத்தின் கீழ்  வராது; நிறுவனம் நடத்துவோர், தொழி லாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவிகி தத்திற்குப் பதில் இனி 10 சதவிகிதம் பங்களிப்பு செலுத்தினால் போதுமானது; தொழிற்சாலை களை ஆய்வுசெய்ய அரசு அனுமதி இல்லாமல் அதிகாரிகள் செல்லக் கூடாது என்று சட்ட விதி களைத் திருத்தியுள்ளது. இவற்றை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) செவ்வாய ன்று மறியல் போராட்டங்களை நடத்தியது. சென்னை சென்னையில், அண்ணா சாலை அஞ்சல்  நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன், தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். கண்ணன், சுமைப்பணி தொழி லாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் அருள்குமார், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி. தயாளன், சிஐடியு  மாநிலக் குழு உறுப்பினர் சி. திருவேட்டை, மாவட்டத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியம், செயலாளர் எஸ்.கே. முருகேஷ், பொருளாளர் பி. சுந்தரம் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென்சென்னை மாவட்டம் சார்பில் கிண்டி அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் தலைமை வகித்தார். சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனவெளியிட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அவை விவசாயம், உள்நாட்டு மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவன மின் நுகர்வோர் மற்றும் நமது நாட்டின் பொது மின்சாரத் துறைக்கு பேரழிவை ஏற்படுத்திடும். ஆரவல்லி மலை வளத்தையும் அழிப்பதற்கு திட்டம் வட இந்தியாவின் தார் பாலைவனம் விரிவடைவதிலிருந்து வட இந்தியாவைப் பாதுகாத்து வரும் ஆரவல்லி மலைகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பகுதியை அழிக்க அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் ஆபத்தான உத்தரவு, வட இந்தியாவின் தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடி மற்றும் தில்லி - என்சிஆர்-இல் நிலவும் தாங்க  முடியாத மாசுபாடு ஆகியவற்றை ஒன்றிய தொழிற்சங்கங்கள் தீவிரமாகக் கவனத்தில் கொண்டன. இந்த அனைத்து கொடூரமான தாக்குதல் களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மற்றும் இயக்கங்களுக்கு, மத்திய தொழிற்சங்கங்கள் தமது வலுவான ஒற்றுமைக் கரத்தை நீட்டுகிறது. மின் ஊழியர்கள், விவசாயிகளும் போராட்டக் களத்திற்கு தயார் பொது வேலைநிறுத்தத்திற்கு நிபந்தனை யற்ற ஆதரவளித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா வுக்கு மத்திய தொழிற்ச ங்கங்கள் தங்கள் வணக்கத்தைத் தெரிவிக்கின்றன. மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவும் (NCCOEEE) அதே நாளில் முழு பலத்துடனும் உறுதியுடனும் தனது துறைசார் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் 2025 டிசம்பர் 23 அன்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்த முடிவு செய்தன. 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி  மாதங்களில் மின்சார ஊழியர்கள் மற்றும் நுகர்வோருடன் கூட்டுக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். ஜனவரி 16 முதல்   தொடர் போராட்டங்கள் விதை சட்டமுன்வடிவு, மின்சார (திருத்த) சட்டமுன்வடிவு, விக்சித் பாரத் ஜி ராம்  ஜி சட்டத்திற்கு எதிராகவும் பிற கோரிக்கை களை முன்வைத்தும் 2026  ஜனவரி 16 அன்று கிராம மற்றும் வட்டார அளவில் எதிர்ப்புத் தினத்தைக் கடைப்பிடிக்க சம்யுக்த கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் மத்திய தொழிற்சங்கங் களும் முழு பலத்துடன் பங்கேற்கும். 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்தத் தொகுப்பு சட்டங்களைச் சுற்றி ஒரு நேர்மறையான ஒருமித்த கருத்தை உருவாக்க  அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கை களிலும் ஈடுபட்டுள்ளது. இதற்குத் தனக்கு வாலாட்டும் ஊடகங்கள் மற்றும் பொதுத்துறை நிர்வாகங்களைப் பயன்படுத்த  முயற்சிக்கிறது. ஆயினும் இவற்றை எதிர்த்துநின்று தொழிலாளர் தொகுப்பு சட்டங்களைக் கிழித்தெறிய தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். மோடி அரசை எச்சரிக்கும்  பிப். 12 - வேலைநிறுத்தம்  மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம், 2026 பிப்ரவரி 12 அன்று “ஒரு நாள் வேலைநிறுத்தத்தைக்” கடைப்பிடிப்பதன் மூலம் மோடி அரசாங்கத்திற்கு ஒரு வலுவான  செய்தியை வழங்க முடிவு செய்துள்ளன. வேலைநிறுத்தத்திற்கான தேதி முறையாக உறுதிப்படுத்தப்படும், மேலும் ஒரு விரிவான செயல் திட்டம் 2026 ஜனவரி 9 அன்று புதுதில்லியில் உள்ள ஹர்கிஷன்சிங் சுர்ஜித் பவனில் மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் தேசிய தொழிலாளர் மாநாட்டில் தயாரிக்கப்படும். மத்திய தொழிற்சங்கங்கள், முழு உழைக்கும் வர்க்கத்தையும் மற்றும் உழைக்கும் மக்களின் பிற பிரிவினரையும் வரவிருக்கும் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராகுமாறும், பரவலாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்குமாறும், மேலும் தங்கள்  அமைப்புகளை ஒரு தீவிரமான போராட்டத்திற்குத் தயார்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றன. உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றவும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் மற்றும் மக்களின் பல்வேறு பிரிவினரையும், குறிப்பாக இளைஞர்களையும் மாணவர்களையும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகவும் ஒற்றுமையுடனும் முன்வருமாறு அறைகூவி அழைக்கிறோம். இவ்வாறு மத்தியத் தொழிற் சங்கங்கள் அறிக்கையில் கோரியுள்ளன.  (ந.நி.)