மேட்டூர், அக். 16 - தமிழக - கர்நாடக எல்லையில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 15 ஆயிரத்து 531 கன அடி வீதமாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 16 ஆயிரத்து 196 கன அடியாக அதிகரித்தது. இதனால், செவ்வாய்க்கிழமை காலை 90.87 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டமும், புதன்கிழமை காலை 92 அடியாக உயர்ந்தது.