tamilnadu

img

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை  உறுதி செய்வோம்-முதலமைச்சர்

! கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை  உறுதி செய்வோம்-முதலமைச்சர்

சென்னை, ஜூன் 15- கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல மைச்சர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக்  கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரி யர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்! ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டு கோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்!  உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந் தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும்  இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள். காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், நான்  முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு  நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல  அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வி யில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதிசெய்வோம்!” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிப் படிப்பை கைவிட்ட மாணவரை நேரில் சந்தித்துப் பேசிய விருதுநகர் ஆட்சியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.