சென்னை, ஜன. 1 - 2025ஆம் ஆண்டில் அரசுப் பணி களுக்கு 20,471 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு 20,471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9,770 தேர்வர்கள் கூடுத லாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதி கரிக்க 11 ஆயிரத்து 809 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அறிவிக்கை வெளியிடப்படும் நாள், தேர்வு நடை பெறும் நாள் ஆகிய விவரங்களுடன் கூடிய ஆண்டுத் திட்டம் வெளியிடப்பட்டு, அனைத்து அறிவிக்கைகளும் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன.
அரசுப்பணிகளின் நேரடி நிய மனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 2025ஆம் ஆண்டு 1,007 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 761 குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக் கைகள் வெளியிடப்பட்டு தெரிவுப்பணி கள் நடைபெற்று வருகின்றன. தேர்வு நடைமுறைகளில் வெளிப்ப டைத்தன்மையை உறுதிப்படுத்தும் வித மாக 2025ஆம் ஆண்டு கலந்தாய்வின் போது காலிப்பணியிடங்களின் விவ ரங்களை தேர்வர்கள் இணையவழியில் அறிந்துகொள்ளும் வகையில் தேர்வா ணையத்தின் வலையொளி சேனல் மூலமாக நேரலையாக ஒளிபரப்பும் நடைமுறையும், கணினிவழி மூலம் நடைபெறும் தேர்வுகளில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளை உத்தேச விடைகள் வெளியிடும்போது தேர்வா ணைய இணையதளத்தின் மூலம் பதி விறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகளில் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் விதமாக 2025ஆம் ஆண்டு அரசுத் துறைகளிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை இணையவழியில் பெறும் நடைமுறையும், தேர்வர்கள் தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தும் வசதியும், தேர்வர்கள் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் இணையவழி யில் மனுக்களை சமர்ப்பிக்கும் வசதி யும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ஆண்டுத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக தொ டர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு ஆகியவை களுக்கான அறிவிக்கைகள் தேர்வா ணையத்தால் வெளியிடப்படவுள்ளன என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
