மதுரை மாவட்டம் அலங்கா நல்லுார் அருகே கீழக்கரையில் உள்ளது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தில் கடந்த வாரம் மதுரை கிழக்கு தொகுதி சார்பில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், தொடர்ந்து ஞாயி றன்று மதுரை சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பில் இந்த ஆண்டின் 3ஆவது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டனர்.
தங்கக் காசு, சைக்கிள்
மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1300 காளைகள், 500 வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமை யாளருக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கக் காசு, சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பொது மக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதா னத்தில் கண்டு ரசிக்க பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி தொகுத்து வழங்கினார். பொதுமக்களின் பொழுது போக்கு நிகழ்வாக ஜல்லி கட்டு போட்டி இடையே டிஜே இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.