தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தை இணைக்கும் “வீர வணக்கம்” திரைப்படம்
தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் “வீர வணக்கம்”. பிரபல மலையாளத் திரைப்பட இயக்கு னர் அனில் வி. நாகேந்திரன் எழுதி, இயக்கியுள்ள வீரவணக்கத்தில் சமுத்தி ரக்கனி, பரத் மற்றும் சிறந்த நடிகைக் கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பிரபல புரட்சி பாடகி யும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையு மான 95 வயதான பி.கே.மேதினி அம்மா வும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பி.கிருஷ்ண பிள்ளை வரலாறு
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறும் பெரியாரின் வாழ்க்கை தத்துவங்களும் இணைந்த இந்த புதுமையான திரைப்படம் ஒரு தாய் மக்களான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு புது திரை அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான “வசந்தத்தின்டே கனல் வழிகளில்” என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம் ஆகும். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சமுத்திரகனியையும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமியையும் மலை யாளத்தில் முதன்முறையாக கதாநா யகன், கதாநாயகியாக அறிமுகம் செய்த படம் தான் வசந்தத்தின்டே கனல் வழிகளில்.
5 இசையமைப்பாளர்கள்
சமுத்திரக்கனி மீண்டும் பி.கிருஷ்ணபிள்ளையாக வீர வணக்கத்தில் நடித்திருப்பது ரசிகர் களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி யுள்ளது. பெரும் சாதி கொடுமை களுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ் கிராமத்தின் விடியல் பயணம் தான் வீரவணக்கம். இத்திரைப்படத்திற்கு எம். கே. அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப் பாளர்கள் ஐந்து அற்புதமான மனதை மயக்கும் பாடல்களை வழங்கியுள்ளது திரைப்படத்தின் தனிச்சிறப்பாகும். ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தர ராஜனின் மகன் டி.எம்.எஸ்.செல்வ குமார் முதல் முறையாக திரைப்படப் பின்னணிப் பாடகராக வீர வணக்கத்தில் அறிமுகமாகிறார். மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ என எண்ணத் தூண்டும் மனதை உற்சாகப்படுத்தும் புரட்சிப் பாடலை அவர் பாடியுள்ளார். வீர வணக்கத்தில் ஆஸ்கார் விருது பெற்ற “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் நாட்டு நாட்டு உட்பட 600 பாடல் களுக்கு மேல் பாடிய பாடகர் யாசின் நிசார், கேரளாவின் முன்னணி நாட்டுப் புறப் பாடகர் சி. ஜே. குட்டப்பன், ரவி சங்கர் மற்றும் சோனியாவும் அருமை யான பாடல்களை பாடியுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இத்திரைப்படத்தில் கரம் கோர்த்துள்ளனர் என்பதால் விரைவில் வெளியாகவுள்ள வீரவணக்கம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே எதிர்பார்ப்பு ஏறத் துவங்கியுள்ளது.