tamilnadu

img

அதிக எடை சுமக்கும் ராக்கெட் தயாரிப்பில் இஸ்ரோ தீவிரம்

கடலூர்,பிப்.10 - மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன் யான் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இஸ்ரோ அடுத்ததாக அதிக எடை சுமக்கும் என்.ஜி.எல்.வி ராக்கெட் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளதாக ககன்யான் குழு தலைவர் இஸ்ரோ விஞ்ஞானி ராம்குமார் தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள புனித வளனார் மேல் நிலைப் பள்ளியில் ஏர் ஷோ நடத்தப்பட்டது. இதில் 10ஆயிரம் பேருக்கு மேலாக மாண வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு  நபர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.  இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ ககன்யான்  மிஷன் தலைவர் விஞ்ஞானி ராம்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இஸ்ரோவில் தற்போது 100 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத் தப்பட்டுள்ளது. இஸ்ரோவில் மிக முக்கிய மானது ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று  தெரிவித்தார். மேலும் வருங்காலத்தில் அதிக எடை சுமக்கும் என்.ஜி.எல்.வி. என்ற ராக்கெட் தயா ரிப்புப் பணியை தொடங்கப்பட்டு ஒன்றிய அரசு அதற்கான அனுமதி வழங்கியுள்ளது என தெரிவித்தார்.