tamilnadu

img

கொரோனா: இந்தியாவில் 62,939 பேர் பாதிப்பு தமிழகத்தில் 7,204 பேர் பாதிப்பு

மதுரை, மே 10- தமிழகத்தில் ஞாயிறன்று 669 பேருக்கு  கொரோனா தொற்றிருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. சென்னையில் 509 பேருக்கும், திரு வள்ளூரில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 43  பேருக்கும், கிருஷ்ணகிரி, திருநெல்வேலியில் தலா  பத்து பேருக்கும், பெரம்பலூரில் ஒன்பது பேருக்கும், காஞ்சிபுரத்தில் எட்டு பேருக்கும், இராணிப்பேட்டை, விழுப்புரத்தில் தலா ஆறு பேருக்கும், அரியலூர், மதுரையில் தலா நான்கு  பேருக்கும், தேனி, வேலூரில் தலா மூன்று பேருக்கும், விருதுநகரில் இருவருக்கும், கரூர்,  புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருப்பத்தூர் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள் ளது. இதுவரை தமிழகத்தில் 7,204 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1961 பேர் குணமடைந்துள்ளனர். 5,195 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 4,305 பேர் தனிமை வார்டுகளில் உள்ளனர். ஞாயிறன்று 13,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2,43,037 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 364 பேர் 12 வயதிற்குட்பட்டவர்கள். இதில் பெண்கள் 187 பேர். ஆண்கள் 177 பேர்.
இந்திய நிலைமை
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மொத்தம் 62,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.19,358 பேர்  குணமடைந்துள்ளனர். 2,109 பேர் உயிரிழந்துள் ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20,228 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 7,796,  தமிழகத்தில் 7,024 தில்லியில் 6,542, மத்தியப்பிர தேசத்தில் 3,614 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது.