tamilnadu

விமான விபத்து உயர்மட்டக்குழு விசாரணை  நாளை துவங்குகிறது

விமான விபத்து உயர்மட்டக்குழு விசாரணை  நாளை துவங்குகிறது

புதுதில்லி, ஜூன் 14- அகமதாபாத்தில், ‘ஏர் இந்தியா’ விமானம் விபத்துக்குள்ளானது குறித்து, ஏற்கெனவே விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வரும்  நிலையில், விபத்துக்கான காரணங்களை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். உள்துறைச் செயலாளர் தலைமையிலான இந்தக்  குழுவில், உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா ளர், குஜராத் மாநிலத்தின் பிரதிநிதி, குஜராத் பேரிடர்  மேலாண்மை அமைப்பின் பிரதிநிதி, அகமதாபாத் காவல் ஆணையர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள னர். இந்தக் குழு, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் விசாரணையை தொடங்கவுள்ள நிலையில், 3 மாதங்க ளில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்  யும் என கூறப்பட்டுள்ளது.