அரசியல் பிரதிநிதித்துவம் பாதுகாக்க எம்.பி.க்கள் குழு பிரதமரைச் சந்திக்கும்!
அநீதியான தொகுதி மறுவரையறையை தமிழ்நாடு ஏற்காது
“நம் உரிமைகளை மீட்டெடுக்க, நியா யமான தொகுதி மறுவரையறை பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறோம்.” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்தார். சட்டப்பேரவையில் திங்களன்று (மார்ச் 24) கேள்வி நேரம் முடிந்ததும், “நியாயமான தொகுதி மறுசீரமைப்பு”க்கான கூட்டு நட வடிக்கைக் குழுவின் கூட்டம் குறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். “2026-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறு சீரமைப்பால், மக்கள் நல்வாழ்வு திட்டங் களை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தற்காக தமிழ்நாடு உள்ளிட்ட நிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக் காட்டி இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 14, 2025 அன்று ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
பிரதமர் உறுதியளிக்க வலியுறுத்தித் தீர்மானம்
அடுத்த கட்டமாக ‘தமிழ்நாட்டில் இருக் கும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த மார்ச் 5 அன்று கூட்டி, தற்போது இருக்கும் தொகுதி வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டு களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்; இது தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும்; நாடாளு மன்றத்தில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத் தில், இரு அவைகளிலும் மாநிலங்களுக்கி டையே எந்த விகிதத்தில் தற்பொழுது தொகு திகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் உயர்த்த வேண்டும்’ என ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
வெற்றிகரமாக நடைபெற்ற மாநில முதல்வர்கள் கூட்டம்
இதற்கான ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, அதற்கான முன்னெடுப்பில் மிகத்தீவி ரமாகச் செயல்பட்டு மார்ச் 22 அன்று அந்தக் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் சென்னை யில் நடைபெற்றது. கேரள மாநில முதல மைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ் சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் நேரில் பங்கேற்க, ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டார்.
அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க 7 தீர்மானங்கள்
விரிவான ஆலோசனைக்குப் பிறகு ‘நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பா னது, மாநிலங்களுடன் கலந்து ஆலோ சித்து வெளிப்படைத்தன்மையுடன் நடை பெற வேண்டும்’; ‘1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப் பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்’; ‘மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட் டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநி லங்கள் தண்டிக்கப்படக்கூடாது’; ‘உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மேற் கொள்ள வேண்டும்’; ‘கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்’; ‘நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து பிரதமர் அவர்களுக்குக் கூட்டு நடவடிக்கைக் குழு வின் சார்பில் சந்தித்து கடிதம் அளித்து முறை யிடுவது’ என கூட்டாட்சி தத்துவம், ஜன நாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இவற்றை இந்த மாமன்றத்திற்குத் தெரி வித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு பிரதமரிடம் நேரில் முறையிடும்!
தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்பு ணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது. அதற்காக இந்த முன்னெடுப்பிற்கு துணை நின்ற தமிழ்நாட் டில் இருக்கக்கூடிய பிரதான எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக் கும், கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங் கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ் நாடு மக்களின் சார்பில் இப்பேரவையின் வாயிலாக என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, நமது உரிமைகளை, நம் போல் பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெ டுத்திட, நியாயமான தொகுதி மறுசீர மைப்பைப் பெற்றிட தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமர் அவர்களைச் சந்திக்கவிருக்கிறோம் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் கூறினார்.