tamilnadu

img

எஸ்ஐஆர் முகமது ஷமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு

எஸ்ஐஆர் முகமது ஷமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு

, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட  12 மாநிலங்களில் (யூனியன் பிரதேசம் சேர்த்து) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி கள் (எஸ்ஐஆர்) நிறைவடைந்து வாக் காளர் வரைவு பட்டி யல் வெளியிடப் பட்டுள்ளன. இதில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவ ரங்கள் போதுமானதாக இல்லை என சுமார் 1 கோடி பேருக்கு சம்மன் அனுப் பப்பட்டது. அதன்படி, கொல்கத்தாவில் வாக்கு ரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்ஐஆர் படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என  கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்க ளுடன் ஜனவரி 9ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடி யேறிவிட்டார். அதே போல முகமது ஷமியின் சகோதரருக்கும் தேர்தல் ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.