தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை வெளியீடு
தேனி, மார்ச் 25- தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்ட மன்றப் பொதுத்தேர்தல் 100 சத வீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு இலச் சினையை மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார். தமிழ்நாட்டின் திராட்சை சாகுபடி யில் தேனி மாவட்டம் மிகப்பெரும் பங்களிப்பை கொண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, திரா ட்சை வடிவிலான இலச்சினை வடிவ மைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இலச்சினையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் எளி தில் நினைவில் கொள்ளும் வகையில் உள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் மற்றும் தேர் தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
