மதுரை, பிப்.23- மதுரையில் வைகை நதியை இரு புறமும் கரைகள் பாதுகாப்பது போல முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கும் என மாநிலச்செயற்குழு மதுக்கூர் இராமலிங்கம் கூறினார். மத்திய அரசால் கொண்டுவரப் பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதி வேடு, தேசிய மக்கள் பதிவேடு சட் டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள சுங்கம் பள்ளிவாசல் பகுதியில் ஆறாவது நாளாக முஸ்லிம்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம், புறநகர் மாவட்டச் செய லாளர் சி. ராமகிருஷ்ணன், மதசார்பற்ற ஜனதா தளம் மாநிலச் செயலாளர் க. ஜான் மோசஸ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைச் செயலா ளர் ஏ.எகியா உள்ளிட்டோர் சனிக் கிழமை கலந்துகொண்டு போராட் டத்தை வாழ்த்தினர், மதுக்கூர் இராமலிங்கம் பேசுகை யில், குடியைக் கெடுக்கும் குடி யுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டமும் தொடரும். முஹ மது நபியின் வழியில் அறவழியில் போராட்டம் நடைபெறுகிறது. குறிப் பாக தீன்குலப் பெண்கள் அதிகள வில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கி றது. முஸ்லிம்களுக்கு ஒரு சிறு பாதிப்பு என்றால் கூட தாம் களத்தில் முதல் ஆளாக நிற்பேன் என ஒரு திரைப்பட நடிகர் கூறினார். அவரை இன்று காண வில்லை. காணாமல் போனவர் பட்டிய லில் அவர் இடம் பெற்றுள்ளார். குடி யுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிப்பல்ல, அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். மதுரை அரசாளும் மீனாட்சி என்ற பாடல் இந்துக் கோவிலிருந்தும், மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் என தேவாலயத்திலிருந்தும். பாங் கின் ஒலி பள்ளிவாசலிலிருந்தும் ஒரு சேர ஒலிக்கும் மதுரை நகரில் நடை பெறும் இந்தப் போராட்டம் வெற்றி பெறும். முஸ்லிம்கள் ஒன்றும் தனி யாகப் போராடவில்லை. அவர் களுக்கு ஆதரவாக குறிப்பாக முஸ்லிம் பெண்க ளுக்கு ஆதரவாக சகோதரர்களாகிய நாங்கள் உள்ளோம். மதுரையில் வைகை நதியை இருபுறமும் கரைகள் காப்பது போல்முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கும் என்றார்.