ஓசூரில் சிபிஎம் பிரச்சார இயக்கம்
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பில் மத்திகிரி,டிவிஎஸ் நகர், ஐடிஐ, தின்னூர்,கூட்டுரோடு பகுதிகளில் ஞாயிறன்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாநகர செயலாளர் நாகேஷ் பாபு தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,கமிட்டி உறுப்பினர்கள் பி.ஜி.மூர்த்தி,ரவி,மணி,சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தேவராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் வாசுதேவன்,நிர்வாகிகள் குணசேகரன்,மாதவன் கலந்து கொண்டனர்.