tamilnadu

நீதிமன்ற உத்தரவுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரான சாதி ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சிபிஎம் வேண்டுகோள்

நீதிமன்ற உத்தரவுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரான சாதி ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சிபிஎம் வேண்டுகோள்

மேல்பாதி திரவுபதி அம்மன் வழிபாடு விவகாரம்

சென்னை, ஏப். 20- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி  கிராமத்தில் அமைந்திருக்கும் திரவு பதி அம்மன் கோவிலில், அனைத்து  தரப்பு மக்களும் வழிபட அனு மதித்ததை தொடர்ந்து, சாதி ஆதிக்க  எண்ணம் கொண்ட ஒரு தரப்பினர்  கோவில் வழிபாட்டை புறக்கணிக்க  தொடங்கியுள்ளனர். சாதி ஆதிக்க  எண்ணத்துடன், கோவிலை புறக் கணிக்கத் தூண்டும் சக்திகளை மக்கள் ஒன்றுபட்டு நின்று ஒதுக்கித் தள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச்  செயலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: “விழுப்புரம் மாவட்டம், மேல் பாதி கிராமத்தில் பழமையான திரவு பதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2023 ஆம்  ஆண்டு பட்டியலின மக்கள் வழி பாடு செய்வதற்கு முயற்சித்த போது, அதற்கு எதிராக சாதி  ஆதிக்க சக்திகளின் தூண்டுத லால் வன்முறை நடந்தது. இந்த  நிலைமையை மாற்றியமைத்து, அனைத்து தரப்பினரும் கோவி லில் வழிபாடு நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென 22  மாதங்களாகவே பலகட்ட போராட் டங்களும், பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலை யில், கோவில் பூட்டி சீல் வைக்கப் பட்டிருந்தது.

கோவில் ஒதுக்கிவைப்பு

இவ்வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கோவில் திறக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. ஏராளமான பட்டியல் சமூக மக்கள்  அம்மனை வழிபாடு செய்தனர். ஆனால், சாதி ஆதிக்க எண்ணம்  கொண்டோர் சிலரின் தூண்டுத லால், இந்த வழிபாட்டுக்கும் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பட்டியல் சாதி மக்கள் வழி பட்டதால் கோவிலின் புனிதம் கெட்டுப்போனதாகவும், இனிமேல் தாங்கள் அம்மனை சென்று வழி பட மாட்டோம் என்றும் சிலர் பேசி யதுடன், கடந்த 3 நாட்களாக திரவு பதி அம்மனை வழிபட மறுத்து, கோவிலை ஒதுக்கி வைக்கும் போக்கும் தொடர்கிறது. கோவிலுக்குச் சென்று இறை  வழிபாடு செய்வது அனைத்து சாதி  மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். இதனை மறுத்து பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனு மதிக்க மறுப்பதும், கோவிலுக்குள் அவர்கள் வந்துவிட்டதால் கோவி லையே புறக்கணிப்பதும் சாதி வெறி யின் வெளிப்பாடு என்பதை சுட்டிக் காட்டுகிறோம். சாமி வழிபாட்டில் அனைத்து மக்களும் சமமே என்பதை ஏற்க  மறுத்து, சாதி ஆதிக்க எண்ணத்தை  கொம்பு சீவி விடும் சக்திகளை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டி கேட்டுக் கொள் கிறது. நீதிமன்ற உத்தரவுக்கும், அரசியலமைப்பு உரிமைக்கும் மாறாகச் செயல்படும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சியின் மாநி லச் செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்  கொள்கிறது”. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.