tamilnadu

img

அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்புக்கு கண்டனம் செப். 5 - தமிழக தொழில் நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்புக்கு கண்டனம் செப். 5 - தமிழக தொழில் நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

 

சென்னை, ஆக. 27 - 50 சதவிகித வரிவிதிப்பு மூலம் இந்தியா மீது அமெரிக்கா துவங்கியுள்ள வர்த்தக போரைக் கண்டித்தும், நாட்டின் சுயசார்புக் கொள்கை, ஏற்றுமதித் தொழில்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி செப்டம்பர் 5 அன்று தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு மென இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்-எல்) லிபரசேன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு:   அமெரிக்காவின் நவீன  காலனி ஆதிக்க அடாவடி அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் யுத்த வெறிக் கொள்கை உலகம் அறிந்துள்ள செய்தியாகும். அந்த நாட்டின் ஜனாதிபதி யாக டொனால்டு டிரம்ப்   இரண்டாவது முறை யாக பொறுப்பேற்றுக் கொண்ட (ஜனவரி 2025) ஆரம்ப நாளிலிருந்து இந்தியா மீதான வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். அங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இந்தி யர்களின் ‘விசா’வைக் காரணமாக்கி, அவர் களைப் போர்க் கைதிகளைப் போல், கை களில் விலங்கு போட்டு திருப்பி அனுப்பி அவமதித்தார். நாட்டின் எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி வருவதை இந்தியா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிரம்ப் அரசு தொடர்ந்து மிரட்டி நிர்ப்பந்தி த்து வந்தது. அமெரிக்காவின் நவீன காலனி ஆதிக்கக் கொள்கைக்கு இந்தியா துணை போகக்கூடாது என இடதுசாரி, ஜனநாயக சக்தி கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.  மென்மையான போக்கில்  ஒன்றிய பாஜக அரசு இந்திய அரசின் மென்மையான அணு குமுறை காரணமாக, இப்போது   அமெரிக்கா வில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரியும், அபராதமும் சேர்த்து 50 சதவிகிதமாக உயர்த்தி 2025 ஆகஸ்ட் 27 முதல் வசூலிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் நமது நாட்டின் ஜவுளி, பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், இறால், தோல் மற்றும் தோல் பொருட்கள், மின்சார இயந்திர சாதனங்கள் என பல பிரிவுகளில் உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இதன் காரணமாக ஏற்றுமதியில் 66 சதவிகித வீழ்ச்சி ஏற்படும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும், 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.  பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் இதன் விளைவாக ஏற்றுமதியைச் சார்ந்து நடைபெறும் தொழில்களில் 70 சதவிகிதம் உற்பத்தியை வெட்டிக் குறைக்க வேண்டும் என்ற நிலை, பல லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் பேரபாயம் கொண்டதாகும்.  இந்தியாவின் சுய பொருளாதாரத்தை கடுமையாகத் தாக்கி, நவீன காலனி ஆதிக்கப் பிடியில் சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட டிரம்ப் அரசின் வரிவிதிப்பு தாக்குதலை, அமெரிக்க ஏகாதிபத்திய அர சின் நிர்பந்தத்துக்கு அடிபணியாமல் நாட்டின் இறையாண்மையை, சுயசார்பை  பாது காக்கும் அரசியல் உறுதியுடன் ஒன்றிய அரசு எதிர்கொள்ள வேண்டும். மானியம் - வரிச்சலுகை அளிக்க வேண்டும் ஏற்றுமதித் தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உற்பத்தித் தொழில்களை பாதுகாக்க ஏற்றுமதி மானியம், வரிச்சலுகை உள்ளிட்ட மாற்றுத் திட்டத்தை உருவாக்கி உதவ வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் அடாவடி வரிவிதிப்புக் கொள்கையைக் கண்டித்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர்  உள்ளிட்ட தொழில் நக ரங்களில் 2025 செப்டம்பர் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.