tamilnadu

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவுதினம் கடைப்பிடிப்பு

திருநெல்வேலி, மே 8- நெல்லை அரசு போக்குவரத்து கழக  மண்டல தலைமை யகம் முன்பு, தோழர் வி.பி.சிந்தனின்  33 வதுநினைவு நிகழ்ச்சி, சங்க தலைவர் தோழர் டி.காமராஜ் தலைமையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலை யான் கலந்து கொண்டார். தோழர் வி.பி.சி  குறித்து உரை யாற்றினார். நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜோதி, பொ ருளாளர் சி.மணி மற்றும் பாலசுப்ரமணியன், பேராட்சி செல்வம், ஜோண்ஸ் எட்வர்ட் ஞான்ராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

சிஐடியு

சிஐடியு திருநெல்வேலி மாவட்டக்குழு  அலுவலகத்தில் தோழர் வி பி சிந்தன்  உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது         தோழர் வி பி  சிந்தன்   தொழிலாளி வர்க்கத்திற்கு ஆற்றிய   பங்கு குறித்து  சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி காமராஜ், எம். பீர்முகமது ஷா ,ஆர்.முருகன், மின் ஊழியர் மத்திய அமைப்பு நெல்லை திட்ட பொருளாளர் நாகையன் ,ஆட்டோ  சங்க பொருளாளர் தேவி ,போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின்  மாவட்ட தலைவர்கள் ஆட்டோ சங்க தோழர்கள் பலரும் கலந்து  கொண்டனர்.